இந்தியாவில் நடைபெறும் மக்களவை தேர்தலின் போது வாக்காளர்கள் அச்ச உணர்வு இல்லாமல் நம்பிக்கையுடன் வாக்களிக்க வேண்டும்' என அகில இந்திய மஜ்லீஸ் ஈ- இதெஹாதுல் முஸ்லிமீன் எனும் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புல்பூர் தொகுதியில் ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் புல்புரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அகில இந்திய மஜ்லீஸ் ஈ. இஹாதெதுல் முஸ்லீமின் எனும் கட்சியின் தலைவரான அஸாதுதீன் ஒவைசி பேசியதாவது..
'' கடந்த தேர்தல்களில் காங்கிரஸ், சோசலிஸ்ட் கட்சி, ஜனதா தளம், ஜனதா கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆகிய கட்சிகளுக்கு வாக்களித்தீர்கள். ஆனால் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. யாருக்கு வாக்களித்தீர்களோ...! அவர்களின் தலைவிதி மாறிவிட்டது. தில்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் யாரை வெற்றி பெற செய்தீர்களோ...! அவர்கள் இன்று நம்மை அழிக்க நினைக்கின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அச்ச உணர்வுடனேயே வாக்களித்து வருகிறோம். அதனால் தான் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. நீங்கள் நம்பிக்கையுடன் வாக்களிக்க வேண்டும். வாக்கு என்பது நம்பிக்கை. அதை சரியாக பயன்படுத்துங்கள்'' என்றார்.
இதனிடையே தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வாழும் இஸ்லாமியர்களிடையே செல்வாக்குடன் திகழும் அசாதுதீன் ஓவைசி தற்போது இந்தியா முழுவதும் பரவிக்கிடக்கும் இஸ்லாமியர்களை அரசியல் ரீதியாக ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரம், பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இயங்கி வரும் சிறிய கட்சிகளுடனும், கொள்கையுடன் ஒத்துப் போகும் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறார். உத்திர பிரதேச மாநிலத்தில் சில தொகுதிகளில் ஏ ஐ எம் ஐ எம் கட்சி- வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. இவர்களுக்கு ஆதரவாக தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் அசாதுதீன் ஓவைசி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM