இலங்கை அரசாங்கத்தின் அசமந்தப்போக்கு குறித்து சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு அதிருப்தி

Published By: Digital Desk 7

25 May, 2024 | 11:43 AM
image

(நா.தனுஜா)

போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்த பின்னரும், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பது தமக்குப் பெரிதும் அதிருப்தியளிப்பதாகத் தெரிவித்துள்ள சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உண்மையான நீதியை வழங்கக்கூடிய நம்பத்தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், சர்வதேச சட்டங்களின் பிரகாரம் குற்றமிழைத்தோரை பொறுப்புக்கூறச்செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 

யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினர் இன்னமும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காகக் காத்திருப்பதாக சுட்டிக்காட்டி சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 

இலங்கையில் இடம்பெற்றுவந்த மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு கடந்த 18 ஆம் திகதியுடன் 15 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், தற்போதுவரை தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கும், யுத்தகாலத்தில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்திய நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படாமையும் எமக்குக் கடும் அதிருப்தியளிக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உண்மையான நீதியை வழங்கக்கூடிய நம்பத்தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், சர்வதேச சட்டங்களின் பிரகாரம் குற்றமிழைத்தோரை பொறுப்புக்கூறச்செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் கடந்த 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சுமார் 4 தசாப்தகாலத்துக்கும் மேலாக அனுபவித்துவரும் தண்டனை விலக்கீடு குறித்தும், காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைக் கண்டறிவதில் அடையப்பட்டிருக்கும் கட்டமைப்பு ரீதியான தோல்வி குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதைப்போன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதற்காக நீண்டகாலமாகக் காத்திருக்கச்செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களது உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டுக்கான உரிமை திட்டமிட்டு மறுக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் உண்மையை அறிந்துகொள்வதற்கும், தமது அன்புக்குரியவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றத்தின் பொறுப்பாளிகள் நீதியின்முன் நிறுத்தப்படுவதைக் காண்பதற்கும் உரித்துடையவர்களாவர்.

 இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சர்வதேச மனிதாபிமானச்சட்டங்கள் வெகுவாக மீறப்பட்டதுடன், மிகமோசமான மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றன. இருப்பினும் இக்குற்றங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும் இலங்கை அரசாங்கங்கள் தவறியுள்ளன.

யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டிருந்தாலும், பெரிதும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், முன்னாள் போராளிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் தொடர் கண்காணிப்புகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகிவருகின்றனர். அத்தோடு இராணுவ மற்றும் ஏனைய அரச கட்டமைப்புக்களின் துணையுடன் சில பௌத்த பிக்குகளால் இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களும், காணிகளும் பலவந்தமாகக் கையகப்படுத்தப்பட்டுவருகின்றன. சட்டத்தின் ஆட்சிக்கு முரணானவகையில் பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து பிரயோகிக்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட நியாயமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாக சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் பிரகாரம் கொண்டிருக்கும் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யுமாறு, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் ஒடுக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது...

2025-05-12 16:16:22
news-image

ரணில் தற்றுணிவுடன் செயற்பட்டார் : ஜனாதிபதி...

2025-05-12 23:18:30
news-image

யாத்திரை பேருந்து விபத்தில் சிக்கியதில் 20...

2025-05-12 23:23:46
news-image

460 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ்...

2025-05-12 22:08:54
news-image

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு...

2025-05-12 18:02:26
news-image

ரம்பொட பேருந்து விபத்து : உயிரிழந்தவர்களின்...

2025-05-12 21:00:06
news-image

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள்...

2025-05-12 17:55:03
news-image

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில்...

2025-05-12 17:47:41
news-image

தொல்லியல் திணைக்களம் பௌத்த பிக்குகளின் கூடாரமா?...

2025-05-12 19:33:11
news-image

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக உள்ளூராட்சி...

2025-05-12 19:28:08
news-image

அதிகார மோகத்தில் செயற்படுகிறது அரசாங்கம் -...

2025-05-12 17:45:07
news-image

சஜித் பிரேமதாசவின் வழிகாட்டலில் வெசாக் பௌர்ணமி...

2025-05-12 17:24:27