பயங்கரவாத வடிவில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது - கலாநிதி பிரபாத் ஏகநாயக்க தெரிவிப்பு!

Published By: Digital Desk 7

24 May, 2024 | 10:08 AM
image

பயங்கரவாத வடிவில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

கல்வி சாரா ஊழியர்கள் தமது தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்காக செயற்படுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும், ஆனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத கல்வி ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தால் அதனை அங்கீகரிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்களின் தனிப்பட்ட பணத்தைச் செலவழித்து, ஒன்லைன் முறையின் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் , எதிர்காலத்தில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டிக்கப்போவதாக அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனவும் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

கல்விசாரா ஊழியர்கள் மற்றும் நிர்வாக மட்ட அதிகாரிகளின் தொழில்சார் நடவடிக்கையினால், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் முழு பல்கலைக்கழக அமைப்பிலும் உடைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விரிவுரைகளை நடாத்தும் ஒரேயொரு நிலையம் கலைப்பீடத்தில் உள்ளதனால் தற்போது அதனைத் திறக்க முடியாது என பிரபாத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாறையில் பலத்த மழை, வெள்ளத்தால் வயல்...

2025-01-16 11:56:51
news-image

நாரிகம கடலில் மூழ்கிய மூன்று வெளிநாட்டுப்...

2025-01-16 11:58:05
news-image

கல்கிசை துப்பாக்கிச் சூடு ; நால்வர்...

2025-01-16 11:49:13
news-image

காத்தான்குடியில் பூட்டப்பட்ட வீட்டில் பொது சுகாதார...

2025-01-16 11:55:50
news-image

யாழில் அதீத போதையுடன் இரு மாணவர்கள்...

2025-01-16 11:36:49
news-image

யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி...

2025-01-16 11:26:55
news-image

மது போதையில் தகராறு ; ஒருவர்...

2025-01-16 11:04:14
news-image

நிட்டம்புவையில் சட்டவிரோத மாட்டிறைச்சி கடை சுற்றிவளைப்பு...

2025-01-16 11:53:48
news-image

மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு...

2025-01-16 10:34:21
news-image

சீனாவில் முதலீட்டு அமர்வில் ஜனாதிபதி பங்கேற்பு

2025-01-16 11:25:51
news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04