மன்னாரில் கடல் அரிப்பால் இயற்கை அனர்த்த அபாயத்தை எதிர்கொள்ளும் வங்காலை கிராமம்

23 May, 2024 | 05:48 PM
image

ன்னார் மாவட்டத்தில் தென் கடலுக்கு அருகாமையில் காணப்படும் வங்காலை கிராமத்துக்குள் கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் படகுகளையும் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மீன்வாடிகளில் காணப்படும் கடற்றொழில் உபகரணங்களையும் பாதுகாப்பான இடங்களில் வைக்கும் செயற்பாட்டில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

நாட்டின் சீரற்ற காலநிலையால் புதன்கிழமை (22) மன்னாரிலும் கடல்சார் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

வங்காலை கிராமத்தை அண்டிய தென் கடல் திடீரென வங்காலை கடற்றொழிலாளர்களின் முக்கிய பிரதான பாதையை மேவி கிராமத்தை நோக்கி கடல் நீர் உட்புகத் தொடங்கியுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடருமானால் அப்பகுதியில் கடல் அரிப்பால் பெரும் ஆபத்தான நிலை காணப்படுவதாகவும் கடல்நீர் கிராமத்துக்குள் புகாதிருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கிராமத்து மக்களால் நீண்ட காலமாக உரிய  அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடல் அரிப்பு தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டுச் செல்வதாகவும் அபாயத்தை எதிர்நோக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

நீண்ட கால பயன்பாட்டில் உள்ள மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் நேற்று புதன்கிழமை (22) முதல் மறு அறிவித்தல் வரை பணிக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், தற்போது பயன்பாட்டில் உள்ள நீண்டகால மீன்பிடி படகுகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஊடாக செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28