வைகாசி விசாகத்தின் மகத்துவங்கள்

22 May, 2024 | 02:02 PM
image

வைகாசி 09ஆம் நாள் புதன்கிழமை (22.05.2024) அன்று வைகாசி விசாகம் விரத தினமாகும். 

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர விரத தினம் பல்வேறு புனிதங்களை கொண்டது.

தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம், சித்திரா பௌர்ணமி போன்று வைகாசி விசாகமும் தெய்வீக சிறப்பு மிக்க தினமாகும். கலியுகவரதனான தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் அவதரித்தது இந்த தினத்திலேயாகும். 

கொடுமைகளை தாங்க முடியாத அமரர்கள் ஈசனைவேண்டிய போது, சத்யோஜாதம், வாமதேவம், அஹோரம், தற்புருஷம், ஈசானம், அதோமுகம் என தனது நெற்றிக்கண்ணில் தோன்றிய ஆறு முகங்களை தீப்பொறிகளாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட அவதாரமே கந்தப்பெருமான். 

ஆறு தீப்பொறிகளும் சரவணப் பொய்கையிலே ஆறு தாமரை மலர்களை ஆலிங்கனம் செய்ய ஞானம், ஐஷ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் என ஆறு குணங்கள் கொண்ட ஆறு குழந்தைகள் தோன்றின.

இவ்வாறு குழந்தைகளும் திருக்கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டனர். ஒரு சமயம் பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக அணைக்கும்போது பன்னிரு விழிகளுடனும், பன்னிரு கரங்களுடனும், ஆறுமுகப் பெருமான் அவதரித்தார்.

அன்றைய சிறப்பு தினமே "வைகாசி விசாகம்" ஆகும். ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பே விசாக நட்சத்திரம். வைகாசி விசாக விரதத்தை முழுமையாக கடைபிடித்தால் ஷஷ்டி விரதம் இருந்த பலனை அடையலாம் என முருக புராணம் கூறுகிறது. 

காக்கும் கடவுளான விஷ்ணு, அழிக்கும் கடவுளான ஈசன், படைக்கும் கடவுளான நான்முகன் ஆகிய மும்மூர்த்திகளும் பிரணவப் பொருளான முருகனுக்குள் அடக்கம். 

முருகு என்றால் அழகு, இளமை என பொருள். விசாக நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன் என்ற பெயரும் முருகனுக்குண்டு. 

தமிழகத்தில் அறுபடை வீடுகளிலும் ஏனைய ஆலயங்களிலும் "வைகாசி விசாக திருநாள்" வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுவது வழக்கம். 

இலங்கையில் முருகன் ஆலயங்களிலும், மற்ற ஆலயங்களிலும் இவ்விழா புனிதமாக போற்றப்படுவது சிறப்பு. 

ஷஷ்டி என்றால் ஆறு என அர்த்தம். ஆறாம் எண்ணுக்கு தனிச்சிறப்பு இருப்பதாக பாம்பன் சுவாமிகள் 6666 முருகப்பெருமான் சிறப்பு பாடல்களை பாடியுள்ளார். 

விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரம் அவதரித்ததும் இவ்வைகாசி விசாகத்தன்றே. திருமழப்பாடி என்ற ஊரில் சிவன் திருநடனம் ஆடியதும் இத்தினத்திலாகும்.

தர்மத்துக்கு அதிபதியான எமதர்மராஜன் அவதரித்ததும் ஒரு வைகாசி விசாகத்தன்றே. பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் ஈசனிடம் "பாசுபதம்" என்ற அதிசக்தி வாய்ந்த அஸ்திரம் பெற்ற நாளும் இத்தினமே. சோழப் பேரரசான ராஜ ராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக தஞ்சை தரணியில் அரங்கேற்றம் செய்வதும் இவ்வைகாசி விசாக நன்னாளிலே என தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டில் இருப்பதாக தொல்பொருள் ஆய்வு கூறுகின்றது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த தினமும் வைகாசி விசாகமே. 

சித்தார்த்தர் ஆகிய கௌதம புத்தர் அவதரித்ததும், ஞானம் பெற்றதும் ஒரு வைகாசி விசாக நன்னாளிலேயாகும். இத்தினத்தை பௌத்த மதத்தை பின்பற்றும் மக்கள் புனித நாளாக அனுஷ்டிப்பர். தமிழ்க் கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானின் பூரண அனுக்கிரஹம் வாய்ந்த இச்சிறப்பு நாளில் விரதம் மேற்கொண்டு வரும் பட்சத்தில் இப்பிறவிப் பயனை அடையலாம் என ஸ்ரீ முருக புராணமும் நக்கீரர் பெருமான் ஆற்றிய திருமுருகாற்றுப்படையும் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது.  

இவ்வகிலம் உய்ய இப்புனித நன்னாளில் ஸ்ரீ முருகப்பெருமானை பூரண நல்லெண்ணத்துடன் வேண்டிப் பிரார்த்திப்போமாக! 

- எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ், கம்பளை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தைப்பூசத் திருநாளில் கமலஹார சித்திரத்தேரில் வலம்...

2025-02-11 10:28:27
news-image

கனவுத் தேசம் - அனுபவப் பகிர்வு

2025-02-07 19:09:06
news-image

வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையிலான 150ஆவது அரங்கேற்றத்தில்...

2025-02-07 10:25:38
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15
news-image

ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த...

2025-01-18 16:50:18
news-image

‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு...

2025-01-15 15:51:30
news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17