சிறைச்சாலை அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம் நிறைவு !

21 May, 2024 | 05:46 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்துவந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி, திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

20ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரி சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர். அதுதொடர்பாக நேற்று  சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட சிறைச்சாலை உயர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிப்படைவதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் செயற்பட வேண்டாம் என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் கோரிக்கை நியாயமானது. அதனை நிறைவேற்ற அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து, அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் கடந்த திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.

நீதி அமைச்சரால் வழங்கப்பட்ட இந்த வாக்குறுதி தொடர்பில் நம்பிக்கை வைத்து, தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டு சேவைக்கு திரும்புவதாக பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக சந்தேக நபர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேற்று முன்தினம் நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்படவில்லை. அதனால் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்துக்கு வந்து விளக்கமளிக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை...

2025-03-20 02:55:15
news-image

கட்சியின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காண...

2025-03-20 02:51:31
news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38
news-image

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக...

2025-03-19 21:45:57
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று...

2025-03-19 21:39:13