சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம் தாம் அல்ல என சியெட் களனி தெரிவித்துள்ளது!

21 May, 2024 | 05:20 PM
image

சியெட் களனி இன்டர்நேஷனல் டயர்ஸ்  நிறுவனமானது (CEAT Kelani International Tyres (Pvt) Ltd) சுங்கத் திணைக்களத்துடன் சுங்க வரிகள் தொடர்பாக எவ்வித முரண்பாடுகளையும் கொண்டிருக்கவில்லை என வாடிக்கையாளர்கள் பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. "மூலப் பொருட்களை இறக்குமதி செய்தமைக்காக சுங்க வரியை செலுத்தாமைக்கான அபராதமாக சுங்கத் திணைக்களத்தினால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த தவறியதாகக் கூறப்படும் நிறுவனம் தாம் அல்ல என சியெட் களனி இன்டர்நேஷனல் டயர்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இலங்கையின் நியூமேடிக் டயர் தேவைகளில் கிட்டத்தட்ட ஐம்பது சத வீதத்தை உற்பத்தி செய்யும் சியெட் கூட்டு முயற்சியில் இலங்கையில் கடந்த தசாப்தத்தில் மட்டும் 8.5 பில்லியனுக்கு மேற்பட்ட முதலீடுகளை மேற்கொண்டு தனது உற்பத்தியில் 20 சதவீதத்தை 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன் மற்றும் இறக்குமதி செய்யப்படும் டயர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் அந்நியச் செலாவணியைப் பாதுகாத்து தேசியப் பொருளாதாரத்திற்கு உதவுவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்