போலியான தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டு தயாரித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (21) நீதிமன்றில் முன்னிலையாகியதையடுத்து அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெற்ற பின்னணியில், டயனா கமகேயிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இடம்பெற்ற தருணத்தில், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் பிரசன்னமாகவில்லை.
இந்நிலையில், 5 இலட்சம் ரூபா ரொக்க பிணை மற்றும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
போலியான தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டு தயாரித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட டயனா கமகே தனது தனிப்பட்ட வழக்கறிஞர் மூலம் நீதிமன்றில் முன்னிலையாகியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM