தரமிக்க உணவு மற்றும் நாளாந்த நுகர்வுப் பொருட்களை குறைந்த விலைக்கு வழங்கும் நோக்கில், நாடெங்கும் சதொச விற்பனைக் நிலையங்களை அமைக்கும் அரசின் திட்டத்தின் கீழ், முதலாவது சதொச விற்பனை நிலையத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (28) கொஹுவலையில் திறந்து வைத்தார்.
கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், லங்கா சதொச தலைவர் டி.எம்.டி.தென்னக்கோன் உட்படப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதனுடன், நாட்டின் பல்வேறு பாகங்களில் மொத்தமாக 52 சதொச விற்பனை நிலையங்கள் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளன.
கொஹுவலை சதொச நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, குறித்த நிலையத்தை முழுவதுமாகக் கண்காணித்து சில ஆலோசனைகளையும் அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டார்.
இந்த விற்பனை நிலையங்களுடன் மொத்தமாக 380 சதொச விற்பனை நிலையங்கள் நாடெங்கும் இயங்கிவருகின்றன. இந்த எண்ணிக்கையை இந்த ஆண்டு இறுதிக்குள் 500ஆக உயர்த்துவதே அரசின் தற்போதைய எதிர்பார்ப்பாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM