ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் இணக்கப்பாட்டுக்கு வரவில்லை - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

Published By: Vishnu

20 May, 2024 | 06:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இடைக்கால ஜனாதிபதியாகவே ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தோம். ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியிடம் எவ்வித இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் உரிய தினத்தில் நடத்தப்படும். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்ற யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைத்தோம் இருப்பினும் ஜனாதிபதி சாதகமான பதிலை இதுவரை குறிப்பிடவில்லை.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தினால் அரசியலில் வீரவசனம் பேசும் தரப்பினரது உண்மை முகம் வெளியாகும்.பொதுத்தேர்தல் இடம்பெற்றால் சிறந்த அரசியல் சூழல் ஏற்படும். இதன் காரணமாகவே பொதுத்தேர்தலை கோருகிறோம்.

எதிர்வரும் ஜுலை மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று முன்னாள் ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டுள்ளது அவரது தனிப்பட்ட கருத்தே தவிர கட்சியின் நிலைப்பாடல்ல,ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் பற்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் இடைக்கால பதவிக்காகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை தெரிவு செய்தோம். 2022 ஆம் ஆண்டு வரை இன்று வரை அவருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை, எவ்வித இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

360 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹாஷிஷ்...

2025-02-16 11:24:57
news-image

மியன்மார் இணையவழி மோசடி முகாமில் இருந்து...

2025-02-16 11:07:47
news-image

விபத்தில் காயமடைந்த இளங்குமரன் எம்.பியை பார்வையிட்ட...

2025-02-16 10:55:45
news-image

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தொடர்பில்...

2025-02-16 11:01:31
news-image

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட உள்ளடக்கம்...

2025-02-16 10:12:56
news-image

இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் கொள்ளையடித்த...

2025-02-16 10:08:34
news-image

இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கும்...

2025-02-16 09:48:30
news-image

புதன்கிழமை இலங்கை வரும் இன விவகாரங்களுக்கான...

2025-02-16 09:42:59
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது கடினம்...

2025-02-16 09:22:20
news-image

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் விரைவில் மீட்கப்படுவர்...

2025-02-16 11:02:59
news-image

அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்...

2025-02-16 09:11:44
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை...

2025-02-15 17:53:42