லுணுகலை, கும்புக்கன் ஓயாவில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (19) மீட்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலை, துபஹிடியவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று (19 )பிற்பகல் லுணுகலை, கும்புக்கன் ஓயாவிற்கு நீராடச் சென்றுள்ள நிலையில் இவரது 17 வயது மகளும் 12 வயது மகனும் வீட்டிலிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் நபரொருவரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் லுணுகலை, கும்புக்கன் ஓயாவிற்கு அருகில் வைத்து இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது முகம் மற்றும் தலையில் பலத்த காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரும் அவரது கணவரும் நீண்ட காலமாக முரண்பாட்டில் ஈடுபட்டிருந்துள்ளதுடன் உயிரிழந்த பெண் இது தொடர்பில் பலமுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சந்தேக நபரான கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பதுளை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM