இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு புதிய நிர்வாகம் : மத்திய குழு தீர்மானம் : வழக்காளிக்கு நிவாரணங்களை வழங்கவும் முடிவு!

20 May, 2024 | 03:29 PM
image

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மீது திருகோணமலை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முடிவுறுத்தி கட்சியின் தெரிவுகளை மீளவும் நடத்துவதற்கு கட்சியின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது. அதன் பின்னர், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், 

திருகோணமலை நீதிமன்றில் உள்ள கட்சி தொடர்பான வழக்கில் வழக்காளி கோருகின்ற நிவாரணங்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.

அந்த வகையில் கட்சியின் நிலைப்பாடுகளை நிலைநிறுத்தி யாப்பினுடைய அடிப்படை விடயங்களை முன்னிறுத்தி எவ்வாறு செயலாற்றியிருக்கின்றோமோ அதன் அடிப்படையில் தலைவர் உட்பட அனைத்து பதவிகளுக்கான தெரிவுகளையும் மீள நடாத்துவதென ஏகமனதாக தீர்மானித்திருக்கின்றோம். 

அந்த வகையில், முதலில் வழக்கை கைவாங்கி கட்சியினை எமது வீட்டுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியினை எடுத்திருக்கின்றோம். 

அத்துடன், ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளர் தொடர்பாக இன்று பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. சிரேஸ்ட தலைவர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் கருத்துக்களும் பரிசீலிக்கப்பட்டது. இவற்றினை ஓர் ஆலோசனைக்காக எடுத்திருக்கின்றோம். இது தொடர்பாக தொடர்ந்தும் மத்திய செயற்குழு மாவட்டக் கிளைகளுடன் கூடி உரிய நேரத்தில் முடிவினை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. 

அதுவரை கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜாவும் பொதுச்செயலாளராக ப.சத்தியலிங்கமும் செயற்படுவார்கள். எமது கட்சி இயங்கிக்கொண்டிருக்கிறது. வழக்கு செயற்பாடுகள் முடிவுறுத்தப்பட்ட பின்னர், புதிய தெரிவுகள் இடம்பெறும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21