(எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழு மற்றும் கட்சி தலைவர்களுக்கிடையில் இடம்பெற இருக்கும் விவாதத்துக்காக திகதி வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் பிரகாரம் இரண்டு கட்சிகளின் பொருளாதார குழுக்களுக்கிடையிலான விவாதத்தை இந்த மாதம் 27ஆம் திகதிக்கும் 31ஆம் திகதிக்கும் இடைப்பட்ட திகதி ஒன்றும் தலைவர்களுக்கிடையிலான விவாதத்தை ஜூன் மாதம் 3ஆம் திகதிக்கும் 7ஆம் திகதிக்கும் இடையிலான ஒரு திகதி வழக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தேசிய மக்கள் சக்திக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
அத்துடன் இரண்டு கட்சிகளின் பொருளாதார குழு மற்றும் தலைவர்களுக்கிடையில் இடம்பெறும் விவாா நடவடிக்கைக்கு தேவையான இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் கோரியிருப்பதாகவும் விவாதத்துக்கான ஊடக நடவடிக்கைக்கு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் நளின் பண்டார தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விவாதத்துக்கான திகதி இன்று 20ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் அதன் பின்னர் இந்த விவாதம் தொடர்பாக நாங்கள் கதைக்கவும் மாட்டோம் விமர்சிக்கப்போவதும் இல்லை என தேசிய மக்கள் சக்தி அரசியல் சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM