(நெவில் அன்தனி)
ஜப்பானின் டோக்கியோ தேசிய விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற சீக்கோ கோல்டன் க்ரோன் ப்றீ ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் காலிங்க குமாரகே இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
400 மீட்டர் ஓட்டப் போட்டியை 45.57 செக்கன்களில் நிறைவு செய்து காலிங்க குமாரகே இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
இம்முறையும் ஒலிம்பிக் அடைவு மட்டமான 45.00 செக்கன்களை அவர் அண்மிக்கத் தவறினார்.
அப்போட்டியை 45.21 செக்கன்களில் நிறைவு செய்த ஜப்பான் வீரர் கென்டாரோ சென்டோ முதலாம் இடத்தைப் பெற்றதுடன் அவரது நாட்டைச் சேர்ந்த கெய்ட்டோ கவாபாட்டா (45.77 செக்.) 3ஆம் இடத்தைப் பெற்றார்.
எவ்வாறாயினும், அடுத்துவரும் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் காலிங்க குமாரகேயும் அருண தர்ஷனவும் பெறும் தரிவரிசை புள்ளிகளின் பிரகாரம் இருவரும் ஒலிம்பிக் தகுதியைப் பெறுவர் என ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் நிறுவனம் நம்பிக்கை வெளிப்பிட்டது.
இது இவ்வாறிருக்க, சீக்கோ கோல்டன் க்ரோன் ப்றீயில் பங்குபற்றிய காலிங்க குமாரகே இன்று (19) இரவு தாய்லாந்தை சென்றடைந்து இலங்கை தொடர் ஓட்டக் குழுவினருடன் இணைந்கொள்ளவுள்ளார்.
தாய்லாந்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறவுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு இன தொடர் ஓட்டப் போட்டிகளில் இலங்கை அணியினர் பங்குபற்றவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM