இலங்கைக்கு வெளிநாட்டுச் செலாவனியைப் பெற்றுத் தரும் முக்கிய ஏற்றுமதி விவசாய உற்பத்தியான சாதிக்காயின் (nutmeg) விலை பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதால் தாம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக கண்டி மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த சாதிக்காய் உற்பத்தியின் 80 சதவீதம் கண்டி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தபோதும் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஏற்றுமதி விவசாய திணைக்களம் பெற்றுத் தந்துள்ள தரவுகளின்படி 2022ஆம் ஆண்டு நாட்டில் 2936 ஹெக்டேயர் நிலத்தில் சாதிக்காய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், 476.06 மெட்ரிட் தொன் சாதிக்காய் உற்பத்தியை ஏற்றுமதி செய்ததன் மூலம் 2022இல் பெறப்பட்டுள்ள வெளிநாட்டு செலாவணி 797.18 மில்லியன் ரூபாயாகும்.
இருந்தபோதும் சில மாதங்களுக்கு முன் 1300 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சாதிக்காயின் விலை தற்போது 700 ரூபாயாக குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சாதிக்காய் தயாரிப்பதற்கு பெரும் செலவீனம் ஏற்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சாதிக்காய் உற்பத்தி மூலம் பெறப்பட்ட வருமானத்தில் பாரிய வீழ்ச்சியை காண முடிவதாகவும் இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் அந்த விவசாயிகள், இதற்கு தீர்வாக அரசாங்கம் முன்வந்து சலுகைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM