யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் மனைவி, இரண்டு பிள்ளைகள் உட்பட 12 உறவுகளை பறிகொடுத்த ஒரு தந்தையின் சோகக்கதை!

18 May, 2024 | 05:44 PM
image

யுத்தத்தின்போது மனைவி, இரண்டு பிள்ளைகள் உட்பட 12 உறவுகளை பறிகொடுத்த தந்தை ஒருவர் இன்று (18) முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றி அஞ்சலி செலுத்தி தனது சோகத்தடங்களை பதிவு செய்துள்ளார். 

அவர் பகிர்ந்துகொண்டதாவது:

கிளிநொச்சி திருவையாற்றினை நிரந்தர வதிவிடமாக கொண்ட எங்களுடைய உறவுகள் 25 பேர் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து  முல்லைத்தீவு வலயர்மடம் பகுதியில் பதுங்கு குழிகள் அமைத்து அங்கே இருந்தோம்.

13.02.2009 அன்று நள்ளிரவு வேளையில் பாரிய சத்தம் கேட்டது. நாங்கள் இருந்த பதுங்கு குழிக்கு மேலுள்ள மரத்தின் மீது எறிகணைகள் விழுந்தன. என்னுடைய உறவுகள் 12 பேர் அவ்விடத்திலேயே இறந்துவிட்டனர். அதில் நானும் காயமடைந்து சுயநினைவற்றிருந்தேன். அந்த இடத்தில் எங்களை பார்ப்பதற்கு யாருமே இருக்கவில்லை. 

அங்கே 13 பேர் காயமடைந்திருந்தோம். நான்கு தினங்கள் கழித்து எங்களை ICRC கப்பல் மூலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள். 

அங்கே வைத்தியசாலையில் வைத்தே நடந்த அசம்பாவிதம் எனக்கு தெரியவந்தது. என்னுடைய மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்ததாக அறிந்துகொண்டேன்.

அதன் பின்னர், சில வருடங்கள் கழித்து மீள் குடியமர எமது சொந்த இடத்துக்கு வந்து தற்போது அங்கேயே வசிக்கிறோம். 

எமது கடந்த கால நிலையை என்றுமே மறக்கமுடியாது. ஒவ்வொரு வருடமும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நினைவுநாளுக்கு வந்து எமது உறவுகளுக்கு அஞ்சலி செலித்தி வருகிறேன் என கண்ணீர் மல்க கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீர்கொழும்பில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-18 12:46:23
news-image

ஐஸ், கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களுடன்...

2025-02-18 12:47:54
news-image

வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள்,...

2025-02-18 12:35:39
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 12:33:25
news-image

துபாய்க்கு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-18 12:26:59
news-image

பாண் விலை குறைப்பு

2025-02-18 12:01:20
news-image

அரசியல் கைதிகள் விடுதலை - 18000கையெழுத்துக்களுடன்...

2025-02-18 11:59:10
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-18 11:57:34
news-image

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியமை...

2025-02-18 11:55:02
news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46