ரயிலில் பயணித்த பல்கலை மாணவியொருவருக்கு தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 6 இளைஞர்கள் ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலிலிருந்த 6 இளைஞர்கள் அதே ரயிலில் பயணித்த பல்கலை மாணவியொருவருக்கு பலமுறை தொல்லை கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பல்கலை மாணவி இது தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர்கள் ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்குற்பட்ட 6 இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்வதற்காக வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (18) சனிக்கிழமை ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM