பாதிக்கப்பட்டோரை மையப்படுத்தி நிறுவப்படாத பொறுப்புக்கூறல் பொறிமுறை நம்பகரமானது அல்ல ; அரசின் பொறிமுறை செயற்திறன் அற்றது - சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு

Published By: Digital Desk 3

20 May, 2024 | 12:13 PM
image

(நா.தனுஜா)

இலங்கை அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையானது பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்குத் தவறியிருக்கின்றது. பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தி உருவாக்கப்படாத பொறுப்புக்கூறல் பொறிமுறையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நம்பகத்தன்மை வாய்ந்த பொறிமுறையாகக் கருதமுடியாது என சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மூன்று தசாப்காலப்போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு நேற்றைய தினத்துடன் (18) 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. இருப்பினும் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பதிவான குற்றங்கள், மீறல்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரை முன்னிறுத்திய நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு, இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையில் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், போர்க்கால மீறல்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்திய நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கிறது. இவை நியாயமான நல்லிணக்க செயன்முறையை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாரில்லை என்பதையே காண்பிக்கின்றன.

வட, கிழக்கைச் சேர்ந்த இலக்கிடப்பட்ட தனிநபர்கள் தொடர் கண்காணிப்புக்களுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகிவருவதுடன், அரச கட்டமைப்புக்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கமும் தொடர்கிறது. அத்தோடு அரச கட்டமைப்புக்களால் காணிகள் அபகரிக்கப்படல், ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், பயங்கரவாத்தடைச்சட்டத்தின் முறையற்ற பயன்பாடு என்பனவும் தொடர்கின்றன.

அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறை செயற்திறனற்றது என்பதுடன், அது பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்குத் தவறியிருக்கின்றது. பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தி உருவாக்கப்படாத பொறுப்புக்கூறல் பொறிமுறையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நம்பகத்தன்மை வாய்ந்த பொறிமுறையாகக் கருதமுடியாது.

இவ்வாறானதொரு பின்னணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கதாகும் என்று தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கமவில் சட்டத்தரணி சுட்டுக் கொலை ;...

2026-02-14 12:32:11
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டம்...

2026-02-14 12:07:31
news-image

காதலர் தினம் ; நுவரெலியாவில் சிவப்பு...

2026-02-14 11:59:49
news-image

நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை...

2026-02-14 11:25:41
news-image

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

2026-02-14 11:04:22
news-image

காதலர் தினத்தன்று பூக்கள் விற்பனையில் பாரிய...

2026-02-14 10:44:44
news-image

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 7 துப்பாக்கிச்...

2026-02-14 10:35:17
news-image

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர் செல்லுபடியாகும்...

2026-02-14 10:18:55
news-image

நாட்டில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு விபத்துகளில்...

2026-02-14 09:39:58
news-image

தலங்கம துப்பாக்கிச் சூடு ; உயிரிழந்தவர்...

2026-02-14 09:15:43
news-image

'இந்தியா - AI உச்சி மாநாடு...

2026-02-14 08:59:50
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-02-14 08:48:57