இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம், கலசங்கள், உற்சவ மூர்த்திகள் கொழும்பிலிருந்து நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தை நோக்கி பவனி

17 May, 2024 | 12:52 PM
image

ரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்தியாவிலிருந்து ஐந்து நதிகளிலிருந்து பெறப்பட்ட தீர்த்தம் மற்றும் கலசங்கள் உட்பட உற்சவ மூர்த்திகள் இன்று வெள்ளிக்கிழமை (17) காலை கொழும்பு மயூரபதி அம்மன் ஆலயத்திலிருந்து மாபெரும் ஆன்மிக ஊர்வலத்துக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் வைத்து கொண்டுசெல்லும் பவனி ஆரம்பமானது. 

இந்த ஊர்வலம் ஆரம்பமாவதற்கு முன் கொழும்பு மயூரபதி அம்மன் ஆலயத்தில்  நடைபெற்ற விசேட பூஜையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினரும் சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய அரங்காவலருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள முக்கியஸ்தர்கள், கொழும்பு மயூரபதி அம்மன் ஆலய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஊர்வலத்தில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஐந்து நதிகளிலிருந்து பெறப்பட்ட தீர்த்தம், கலசங்கள், உற்சவ மூர்த்திகள் இன்று மயூரபதி அம்மன் ஆலயத்திலிருந்து காலி வீதி, மெயின் வீதி, செட்டியார் வீதி, ஆமர் வீதி ஊடாக அவிசாவளை, யடியான்தோட்ட, கினிகத்தேன, ஹட்டன், கொட்டக்கலை, தலவாக்கலை, வட்டகொட, பூண்டுலோயா வழியாக இறம்பொடை ஆஞ்சநேயர் ஆலயத்தை சென்றடையும்.

அதனை தொடர்ந்து, நாளை 18ஆம் திகதி சனிக்கிழமை காலை இந்த ஊர்வலம் இறம்பொடை ஆலயத்திலிருந்து நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தை நோக்கி ஆரம்பமாகும். 

இந்த ஊர்வலத்தை நுவரெலியா கண்டி வீதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் ஆலயத்துக்கு முன்னாலிருந்து நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய நிர்வாக சபையினரின் வழிகாட்டலில் அங்கிருந்து நடைபவனியாக கண்டி வீதி, பழைய கடை வீதி, புதிய கடை வீதி, வெலிமடை வீதி, தர்மபால சந்தி வரை சென்று அங்கிருந்து வாகன ஊர்வலமாக வெலிமடை வீதியூடாக சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தை சென்றடையும். 

தொடர்ந்து, நாளை மறுதினம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வைபவத்தில் பிரமர் திணேஷ் குணவர்தன, வாழும் கலைப் பயிற்சியின் நிறுவுனர் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உட்பட பலர் கலந்துகொள்வார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விகாஷ்னி சதாசிவத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-01-18 17:51:01
news-image

யாழ்ப்பாணம் - பாசையூரில் எம்.ஜீ.இராமசந்திரனின் 108...

2025-01-18 15:57:12
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36