நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொதுக் கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேள்வி எழுப்பியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கை பொலிஸாரினால் தனிப்பட்ட இல்லம் ஒன்றிற்கு தேடி சென்று இறந்தவர்களை நினைவில் ஏந்தி நிற்கும் தமிழ் பெண்களை கதற வைத்து, இழுத்து சென்று கைது செய்துள்ளதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.
புலிகள் இயக்கம் சட்டப்படி தடை செய்யப்பட்டது எனவும் அது சட்ட பிரச்சினை என்பதோடு அந்த இயக்கத்தின் சின்னங்கள் எதுவும் இல்லாமல் தங்கள் வீட்டில் கஞ்சி காய்ச்சி குடித்த மக்களை பொலிஸார் ஏன் தேடி சென்று கைது செய்யவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியதாக தெரிவித்துள்ளார்.
தொலைபேசி உரையாடல் குறித்து மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் அதிகாரிகளுடன் முரண்பட்டுள்ளமையினால் கைது செய்யப்பட்டதாகவும் இந்த விடயம் தொடர்பாக பிணை கோரிக்கையை எதிர்க்க வேண்டாம் என பொலிஸாருக்கு சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் கூறி விட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டமை தொடர்பில் இவ்வாறான பல கேள்விகளை எழுப்பியபோது “அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்” என்று மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனக்கு பதில் கூறினார்.
“நினைவேந்தல் தொடர்பில் பொதுக் கொள்கை இல்லையா ? அறிவிக்க முடியாதா?” என்ற எனது கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில் அளிக்கவில்லை, என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM