நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொதுக்கொள்கை அரசுக்கு இல்லையா என ஜனாதிபதியிடம் மனோ கேள்வி !

Published By: Digital Desk 7

17 May, 2024 | 03:30 PM
image

நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொதுக் கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேள்வி எழுப்பியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு,   இலங்கை  பொலிஸாரினால் தனிப்பட்ட இல்லம் ஒன்றிற்கு  தேடி சென்று இறந்தவர்களை நினைவில் ஏந்தி நிற்கும் தமிழ் பெண்களை கதற வைத்து,  இழுத்து சென்று கைது செய்துள்ளதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.

புலிகள் இயக்கம் சட்டப்படி தடை செய்யப்பட்டது எனவும் அது சட்ட பிரச்சினை என்பதோடு அந்த இயக்கத்தின் சின்னங்கள் எதுவும் இல்லாமல் தங்கள் வீட்டில் கஞ்சி காய்ச்சி குடித்த மக்களை பொலிஸார் ஏன்  தேடி சென்று கைது செய்யவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியதாக தெரிவித்துள்ளார்.

தொலைபேசி உரையாடல் குறித்து மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில், 

கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் அதிகாரிகளுடன்  முரண்பட்டுள்ளமையினால் கைது செய்யப்பட்டதாகவும் இந்த விடயம் தொடர்பாக  பிணை கோரிக்கையை எதிர்க்க வேண்டாம் என  பொலிஸாருக்கு  சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் கூறி விட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டமை தொடர்பில் இவ்வாறான பல கேள்விகளை எழுப்பியபோது “அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்” என்று மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனக்கு  பதில் கூறினார்.

“நினைவேந்தல் தொடர்பில் பொதுக் கொள்கை இல்லையா ? அறிவிக்க முடியாதா?” என்ற எனது  கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில் அளிக்கவில்லை, என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய கல்வியியல் கல்லூரில் மாணவி தவறான...

2025-05-24 13:29:53
news-image

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்!

2025-05-24 13:40:20
news-image

பூநகரியில் அரச காணிகளில் அத்துமீறல் :...

2025-05-24 13:05:32
news-image

நன்னேரியவில் புதையல் தோண்டிய இருவர் கைது!

2025-05-24 12:34:24
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய...

2025-05-24 12:51:36
news-image

ஜனாதிபதி ஜூன் மாதம் ஜேர்மனிக்கு விஜயம்...

2025-05-24 12:39:26
news-image

அரச நிறுவனங்களில் இலஞ்ச பணத்தை கூட்டாக...

2025-05-24 12:56:26
news-image

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்ய வேண்டாமெனத் தெரிவித்த...

2025-05-24 11:48:00
news-image

ஜனாதிபதியின் ஜேர்மனி விஜயத்தின் போது பயங்கரவாத...

2025-05-24 12:12:21
news-image

சிறைச்சாலையில் தகராறு ; “புரு முனா”வும்...

2025-05-24 11:08:10
news-image

உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றில்...

2025-05-24 11:57:55
news-image

ஏறாவூரில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி பலி...

2025-05-24 11:41:15