(துரைநாயகம் சஞ்சீவன்)
திருகோணமலை வெருகல் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுக்க முயன்ற சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு இரவோடு இரவாக சென்று, நிகழ்வை தடுக்கும் வகையில் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் அப்பாவி பொது மக்கள் அனுபவித்த வலிகளை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை வெருகல் பகுதியில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் இன்றைய தினம் (16) நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு 8.30 மணிக்குப் பின்னர், இந்த சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்குச் சென்ற ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த நபர்களிடம், தடை உத்தரவு பெறப்பட்டிருப்பதாகக் கூறி தடை உத்தரவை வழங்காமல் சம்பந்தப்பட்ட நபர்கள் உட்பட பலரது பெயர்களையும் வாசித்து காண்பித்ததாகவும் தெரிய வருகின்றது.
'தடையை மீறி நிகழ்வை முன்னெடுப்பீர்களாக இருந்தால் கைது செய்யப்படுவீர்கள்' எனவும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் குறைந்தது 6 மாதங்களுக்கு பிணை எடுக்க முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்யப்படும் என அச்சுறுத்தியதாகவும் தெரியவருகிறது.
அத்துடன், கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை தாங்கள் தடுக்கவில்லை எனவும் தற்போது அதனை தடுக்கவேண்டிய அழுத்தம் இருப்பதாகவும் அதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM