தியத்தலாவை,நரியாகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற கார் பந்தய போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தியத்தலாவை,ஹெலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தியத்தலாவை,நரியாகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற “Fox Hill Super Cross 2024” கார் பந்தய போட்டியின் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, போட்டியில் பங்குபற்றிய இரண்டு கார்கள் ஒன்றுடன் ஓன்று மோதியதில் ஒரு கார் பந்தய திடலை விட்டுவிலகி அங்கிருந்த பார்வையாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM