பிரேசிலில் வெள்ளம் : ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு ; 149 பேர் பலி

Published By: Digital Desk 3

15 May, 2024 | 04:54 PM
image

பிரேசிலில் அடை மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைவதால் மேலும் சேதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில்   வெள்ளத்தால் 149 பேர் உயிரிழந்துள்ளதோடு, 124 பேர் காணாமல் போயுள்ளார்கள்.

வெள்ளத்தால் சுமார் 155,000 வீடுகள்  சேதமடைந்துள்ளதோடு, 600,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். 

சீரற்ற வானிலையால் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில்  நெருக்கடியால் 21 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ரியோ கிராண்டே டோ சுலின் தலைநகரான போர்டோ அலெக்ரேவில் உள்ள குவாபா ஆற்றின் நீர் மட்டம் 8  அடி வரை உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்க நடவடிக்கை எடுத்துவருதாக பிரேசிலின் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹடாட் திங்களன்று தெரிவித்ததுள்ளார்.

பிரேசிலிய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தேசிய சிவில் பாதுகாப்பு மனிதாபிமான உதவிகள் மற்றும் சேதமடைந்த கட்டமைப்புகளை புனரமைத்தல் செவ்வாய்க்கிழமை முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிடைக்கும் என்று அறிவித்தார்.

"இன்று முதல், பாடசாலைகள், நாளாந்த பராமரிப்பு நிலையங்கள், சுகாதார பிரிவுகள், வைத்தியசாலைகளை மீட்டெடுப்பதற்கான கோரிக்கைகளை மேயர்களும் மாநில அரசாங்கமும் பதிவு செய்யலாம். பதிவு செய்தால் போதும், உடனடியாக மக்களுக்கு சேவைகள் கிடைக்கும்" என ஜனாதிபதி சில்வா நேரடி ஒளிபரப்பின் போது தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடினமான நேரத்தில் அமெரிக்கா பிரேசிலுக்கு ஆதரவு கொடுக்கும் என  ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

பிரேசிலின் வரலாறு காணாத மழைப்பொழிவுக்குபசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரிக்கும் எல் நினோதான்  காரணம் என உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவின் தங்க சுரங்கத்தில் சட்டவிரோதமாக அகழ்வில்...

2025-01-14 11:34:11
news-image

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்;...

2025-01-13 19:48:36
news-image

பள்ளி மாணவரின் மர்ம மரணத்தை கண்டித்து...

2025-01-13 09:56:38
news-image

உத்தர பிரதேசத்தின் கன்னவுஜ் ரயில் நிலைய...

2025-01-13 10:03:33
news-image

காசா மோதலின் முதல் 9 மாதங்களில்...

2025-01-12 13:35:01
news-image

பிரிட்டனின் தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக...

2025-01-12 12:06:56
news-image

ரஸ்யாவுடனான போர் முனையில் இரண்டு வடகொரிய...

2025-01-12 10:28:48
news-image

அசாம் சுரங்க விபத்தில் 4 உடல்கள்...

2025-01-12 10:04:22
news-image

தமிழ்நாடு - பினாங்கு மாநிலங்களின் வீட்டு...

2025-01-11 17:01:55
news-image

டில்லி விமான நிலையத்துக்கு முதலை மண்டை...

2025-01-10 16:14:47
news-image

காட்டுத்தீயிலிருந்து வீட்டை பாதுகாக்க முயன்றவேளை எனது...

2025-01-10 12:53:11
news-image

ஸ்பெயினை நோக்கி சென்றுகொண்டிருந்த குடியேற்றவாசிகளின் படகு...

2025-01-10 12:04:33