புதுமுக நாயகன் தருண் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குற்றம் புதிது' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான கே. பாக்யராஜ் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் புதுமுக நாயகனான தருணை அறிமுகப்படுத்தினார்.
அறிமுக இயக்குநர் ரஜித் இயக்கத்தில் உருவாகும் 'குற்றம் புதிது' எனும் திரைப்படத்தில் தருண், செஷ்வித்தா, மதுசூதன் ராவ், ராமச்சந்திரன், 'பாய்ஸ்' ராஜன், பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா, தினேஷ் செல்லையா, ஸ்ரீகாந்த், மீரா ராஜ், 'டார்லிங்' நிவேதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கரண் பி. கிருபா இசையமைக்கிறார். திரில்லர் வகையிலான திரைப்படமாக தயாராகும் இப்படத்தை ஜி கே ஆர் சினி ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் எஸ். கார்த்திகேயன் மற்றும் தருண் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கற்பனைக்கு அப்பாற்பட்ட விடயத்தை யதார்த்தமான பாணியில் விவரிக்கும் படைப்பாக 'குற்றம் புதிது' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.
இப்படத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் அறிமுக போஸ்டர் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM