இலங்கை தொலைத்தொடர்புகள் திருத்த சட்டமூலத்தை வாபஸ் பெறவேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை

Published By: Digital Desk 7

14 May, 2024 | 04:25 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இலங்கை தொலைத் தொடர்புகள் திருத்த சட்டமூலத்தால் ஊடக சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. அதனால் இந்த சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்களின் கருத்துகளை போதியளவு ஆராயாமல் இலங்கை தொலைத் தொடர்புகள் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளீர்கள்.

இலங்கை தொலைத் தொடர்புகள் திருத்தச் சட்டம் தொடர்பில் பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.  இந்த வரைவில் சுதந்திர ஊடகத்திற்கு பாதகம் விளைவிக்கும் பல முன்மொழிவுகள் உள்ளன.

போதியளவு மக்கள் மத்தியில் கலந்தாலோசிக்காமல், ஏனைய தரப்பினரின் கருத்துக்களை கேட்டறியாமல் இந்த திருத்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை தொலைத் தொடர்புகள் திருத்தச் சட்டத்தில் சுதந்திர ஊடகத்திற்கு  பாதகமான பல ஷரத்துகள்  உள்ளடக்கப்பட்டுள்ளன.

இழப்பீட்டைச் செலுத்தி தமது ஊடக அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளுதல், ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு அமைய பொது மக்களின் நலன் தொடர்பில் ஆணைக்குழுவே ஒரு பொருள்கோடலை வழங்கி அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வதற்கான யோசனையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சுயாதீனமான சுதந்திரமான நாட்டில் சுயாதீனமான சுதந்திரமான ஊடகம் இருக்க வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க கட்டுப்பட்டுள்ள நாமனைவரும் இலங்கை தொலைத் தொடர்புகள் திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற ஷரத்துக்கள் தொடர்பில் எமது கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துகிறோம். இதனை நாம் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தவும் எதிர்பார்க்கிறோம்.

இதனை மேற்கொள்வதற்கு முன்னர். தயவு செய்து இதனை மீளப் பெறவேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கிறோம். மக்களின் நலன், ஊடகங்களின் நலன் தொடர்பில் இந்நாட்டில் தீர்மானங்களை எடுப்பதற்கு உங்களுக்கு உரிமையில்லை.

பொதுமக்களின் நலன் ஒருபுறமிருக்க இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிலுள்ள அதிகாரிகள் டிசிபி வழங்குவதாகவும், ஆளுங்கட்சிக்கு வருமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரசாரம் செய்கின்றனர்.

இது இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் கடமையல்ல. ஆகவே டீ.ஆர்.சி இன் கடமைகளை ஆணைக்குழுவிற்கு கையளித்தால், பொருட்கோடலை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கினால் இந்நாட்டின் சுதந்திர ஊடகம் அற்றுப்போகும். ஆகவே இந்த ஷரத்துகளை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34