நாட்டின் பொருளாதாரம்  கத்தி நுனியிலேயே உள்ளது - அமைச்சர் பந்துல குணவர்தன

Published By: Vishnu

14 May, 2024 | 02:32 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டிலுள்ள அனைத்து பாலங்கள் உடைந்து விழுந்தாலும் அதனைத் திருத்துவதற்காக ஒருபோதும் மீண்டும் பணத்தை அச்சடிக்க முடியாது. பணம் அச்சடிப்பதை மத்திய வங்கி  தடை செய்துள்ளது. அத்துடன் ஆட்சிக்கு வந்தால் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்றுவதாக எதிர்க்கட்சி தெரிவிப்பது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்;

பாலங்கள் உடைகின்றன மண் சரிவு ஏற்படுகின்றன அபிவிருத்திகள் நிறுத்தப்பட்டுள்ளன இவைகள் இதுவரை அரசாங்கத்திற்கு தெரியவில்லையா என அரசாங்கத்தைக் கேள்வி கேட்கின்றனர்.

கடந்த அரசாங்கங்கள் பணத்தை அச்சடித்து அவ்வாறான திட்டங்களை முன்னெடுத்தன. தற்போது அவ்வாறு செய்ய முடியாது. மத்திய வங்கி பணம் அச்சடிப்பதைத் தடை செய்துள்ளது அதனால் நாட்டில் உள்ள அத்தனை பாலங்களும் உடைந்து விழுந்தாலும் பணம் அச்சடிக்கப்பட மாட்டாது. மகாவலி கங்கையை வடக்குக்கு திருப்புவதும் கடன் மூலமாகும்.

தாங்கள் அரசாங்கத்தை அமைத்ததும் கடன் தொடர்பான உடன்படிக்கைகளை மாற்றுவதாக தெரிவிப்பது நாட்டு மக்களை ஏமாற்றும் பேச்சாகும், கடந்த அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடனை செலுத்துவது அவசியம். அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் இன்னும் கத்தி நுனியிலேயே  உள்ள நிலையிலேயே உள்ளது. தவறி ஒரு அடியை எடுத்தாலும் கால் படுகாயமடையும் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்...

2025-01-14 19:21:46
news-image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று...

2025-01-15 01:36:26
news-image

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு...

2025-01-14 19:58:50
news-image

இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக...

2025-01-14 19:39:54
news-image

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை...

2025-01-14 19:55:32
news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13