இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாலஸ்தீனத்திற்காக நாங்கள் முன் நிற்கிறோம் - எதிர்க்கட்சித் தலைவர்

Published By: Vishnu

14 May, 2024 | 01:05 AM
image

பாலஸ்தீன மக்களுக்கு பல தசாப்தங்களாக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கெதிராக இன, மத வேறுபாடின்றி பாலஸ்தீன மக்களுடன் என்றும் முன்நிற்போம். இந்த கொடூரமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுகின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொலைகார அரசாக இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்களின் வாழ்வை முற்றாக அழித்து, அவர்களின் தாயகத்தை அழித்து, அரச பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி பாலஸ்தீன மக்கள் மீது நடத்தி வரும் மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு எதிராக இலங்கையர்களாகிய நாம் உலக மக்களோடு  முன் நிற்போம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவித்து திங்கட்கிழமை (13) கொழும்பு லிபர்டி சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உடனடியாக போர் நிறுத்த்திற்குச் சென்று பட்டினியால் வாடும் பாலஸ்தீன மக்களின் வாழும் உரிமை எல்லாவற்றுக்கும் முதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று முழு உலகுமே கோரிக்கை விடுக்கிறது. இஸ்ரேல் அரசாங்கம் மருத்துவமனைகளுக்கு குண்டுத்தாக்குதல் நடத்துகிறது. பாடசாலைக்கு குண்டுத் தாக்குதல் நடத்துகிறது. சிவில் குடிமக்களை அப்பட்டமாக கொலை செய்து வருகிறது. இந்த கொலைகார செயலை கண்டிக்கின்றேன். இந்த அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றேன்.

இஸ்ரேலும் பலஸ்தீனும் சமாதானமாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என இதற்கு முன்னர் நாம் பேசும் போதெல்லாம் கூறினோம்.

இஸ்ரேல் அரசாங்கம் தொடர்ச்சியாக பலமுறை பேச்சுவார்த்தைகளை நிராகரித்து, பாலஸ்தீன தாயகத்தை அழிக்கும் அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றேன், இந்த கொலைகார பயங்கரவாதத்தை கைவிடுமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கேட்டுக் கொள்கின்றேன். பெயர் குறிப்பிட்டு கூறுவது இதுவே முதற் தடவை.

சமாதானத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் இடமளித்தே இதற்கு முன்னர் பெயர் கூறாது பேசினேன்.இரு தரப்பினரையும் ஒன்றிணைக்கும் நோக்கிலயே பேசினேன். ஆனால் நெதன்யாகு அரசாங்கம் தொடர்ச்சியாக இடைவிடாது மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான, கீழ் தர செயலை, பயங்கரவாத நடவடிக்கையை நாம் வண்மையாக கண்டிக்கிறோம்.

பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை மாத்திரமல்ல, அவர்களது நாட்டுக்குள் வாழும் உரிமை அவர்களுக்குள்ளது. அந்நாட்டுக்காக இலங்கையர்களாகிய நாமனைவரும் சாதி,இன,மத,குலம், கட்சி அல்லது வேறேதேனும் பேதங்கள் இருப்பின் சகல பேதங்களையும் கடந்து பலஸ்தீன மக்களின் சகல உரிமைகளுக்காகவும் முன்நிற்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட...

2025-02-06 16:21:18
news-image

பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும்...

2025-02-06 16:23:38
news-image

கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிக்க சுங்கம்...

2025-02-06 19:09:09
news-image

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன்...

2025-02-06 18:54:04
news-image

தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக் கொடியை...

2025-02-06 19:11:23
news-image

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய...

2025-02-06 16:24:53
news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13