(எம்.எம்.சில்வெஸ்டர்)
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்றுநரான பிரண்டன் மெக்கல்லம் ஜேம்ஸ் அண்டர்சனுடன் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டிருந்ததாக இங்கிலாந்தின் 'தி கார்டியன்' செய்தி வெளியிட்டுள்ளது.
2025-26ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்கு புதிய வேகப்பந்துவீச்சாளர்களை கண்டறியும் பணியில் இங்கிலாந்து அணி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜேம்ஸ் அண்டர்சனிடம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய சுற்றுப் பயணத்தின் முடிவில் அவர் தனது 700ஆவது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி 700 விக்கெட் மைல்கல்லை எட்டிய உலகின் மூன்றாவது வீரரானார்.
இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகளுடன் மூன்று போட்டிகள் கொண்ட போட்டித் தொடரில் இங்கிலாந்து பங்கேற்கவுள்ளது. அத்துடன், ஆகஸ்ட் மாதம் இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.
இதன் முதல் போட்டி அண்டர்சனின் சொந்த ஊர் மைதானமான ஓல்ட் டிரபோர்ட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டி அவரின் பிரியாவிடை போட்டியாக அமையும் என 'தி கார்டியன்' குறிப்பிட்டுள்ளது.
2003ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கில் கால்பதித்த ஜேம்ஸ் அண்டர்சன், 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுக்களை வீழ்த்தி அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் 708 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM