கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரி 98ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களின் 45ஆவது பிறந்த தின ஒன்றுகூடல் நிகழ்வு டுபாய் நகரில் நடைபெற்றது.
'லெஜெண்ட்ஸ் 1979' எனும் தொனிப்பொருளில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை உட்பட 16 நாடுகளில் இருந்து 79 பேர் கலந்துகொண்டனர்.
பழைய மாணவர்கள் மத்தியில் நல்லுறவை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் பாடசாலையை அடையாளப்படுத்தும் வகையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ரீசேர்ட்டுக்களை அணிந்திருந்ததுடன், பாலைவனத்துக்கான விஜயத்தின்போது, தமிழர்களின் அடையாளத்தினை பறைசாற்றும் கலாசார அடையாள வேட்டி அணிந்திருந்தனர்.
இந்நிலையில், கொழும்பு இந்து கல்லூரியின் பழைய மாணவர்களால் தமது பாடசாலையின் மகத்துவம் மற்றும் தமிழர்களின் கலாசார விழுமியங்கள் தொடர்பாகவும் தமது ஒன்றுகூடலின் நோக்கம் தொடர்பாகவும் பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இந்த ஒன்றுகூடலை முன்னிட்டு சிவமயூரன் மற்றும் கஜமுகன் ஆகியோரால் தென்னிந்திய திரையிசை பாடல்களுக்கு நிகரான பாடலொன்று தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM