சாலியவெவயில் கரட் துண்டு தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

13 May, 2024 | 02:52 PM
image

கரட் துண்டு தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று சாலியவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சாலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வயதும் 7 மாதமுமான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது உயிரிழந்த சிறுவனின் தாய் வீட்டில் உணவு தயாரித்துக் கொண்டிருந்துள்ள நிலையில் சிறுவனின் சகோதரி சிறுவனுக்கு கரட் துண்டு ஒன்றை உண்பதற்குக் கொடுத்துள்ளார்.

இதன்போது இந்த கரட் துண்டு சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ள நிலையில் சிறுவனின் தாயும் தந்தையும் அதனை வெளியில் எடுக்க முயன்றுள்ளனர்.

இந்நிலையில், தொண்டையில் சிக்கிய கரட் துண்டை வெளியில் எடுக்க முடியாததால் சிறுவனை அம்பியூலன்ஸ் மூலம் அநுராதபுரம் மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பிரேத பரிசோதனையில் சிறுவனின் தொண்டையில் கரட் துண்டு சிக்கியதால் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக அனுராதபுரம் மாவட்ட வைத்தியசாலையின் மரண விசாரணையில் அதிகாரி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜப்பானின் நிதி உதவியில் அநுராதபுரத்தில் இரண்டாம்...

2025-02-11 13:48:14
news-image

ரயில் - வேன் மோதி விபத்து...

2025-02-11 13:01:35
news-image

வவுனியாவில் கடைத்தொகுதியிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

2025-02-11 12:57:30
news-image

துபாயில் இன்று நடைபெறும் 2025 உலக...

2025-02-11 12:52:05
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 13 துப்பாக்கிச்...

2025-02-11 12:30:53
news-image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-02-11 12:21:30
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-11 12:11:49
news-image

யோஷிதவின் பாட்டிக்கு வெளிநாட்டு பயணத்தடை

2025-02-11 11:57:37
news-image

நுவரெலியாவில் 4 பாகை செல்சியஸில் வெப்பம்...

2025-02-11 12:02:32
news-image

துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட...

2025-02-11 11:46:25
news-image

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இருவர் காயம்! 

2025-02-11 12:07:59
news-image

கால்வாயில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

2025-02-11 12:07:17