வட ஆப்கானிஸ்தானில் பெய்த கடும் மழையால் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக வெள்ளத்தில் சிக்கி 315 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, கால்நடைகளும் அழிந்துள்ளன.
வீதிகள் சேற்றில் புதைந்திருப்பதோடு சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் மற்றும் நீர் வழங்கல் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதாக உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன.
குடும்பத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 13 உறுப்பினர்களையும் இழந்த முஹம்மது யாகூப் கூறுகையில்,
"எங்களுக்கு உணவு இல்லை, குடிநீர் இல்லை, தங்குமிடம் இல்லை, போர்வைகள் இல்லை, எதுவும் இல்லை, வெள்ளம் அனைத்தையும் அழித்துவிட்டது,"
உயிர் பிழைத்தவர்கள் வாழ போராடுகிறார்கள். 42 வீடுகளில், இரண்டு அல்லது மூன்று வீடுகள் மாத்திரமே எஞ்சியுள்ளன, வெள்ளம் முழு பள்ளத்தாக்கையும் அழித்துவிட்டது என்றார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை, மனிதாபிமான அமைப்புகள் மற்றும் தனியார் வணிகங்களை தலிபானின் பொருளாதார அமைச்சர் டின் முகமது ஹனிஃப் வலியுறுத்தியுள்ளார்.
"உயிர்களும் வாழ்வாதாரங்களும் கழுவப்பட்டுவிட்டன," "திடீரென வெள்ளம் கிராமங்களை அழித்து, வீடுகளையும் அழித்து கால்நடைகளை கொன்றது." மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 310,000 சிறுவர்கள் வசிக்கின்றனர் என சேவ் தி சில்ரன் ஆப்கானிஸ்தான் பணிப்பாளர் அர்ஷத் மாலிக் தெரிவித்துள்ளார்.
பாக்லான் மாகாணத்தில் மாத்திரம் 153 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் எண்ணிக்கை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையால் கருதப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல நாடுகளின் உதவிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் குறிப்பாக பெண்களுக்கு கல்வி கற்க தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM