(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து புதிய அரசாங்கம் ஒன்று தோற்றம் பெறும் வரை அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கும்,தனியார் மயப்படுத்தவும் முன்னெடுத்துள்ள சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முழுமையாக இடைநிறுத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் தரப்புக்கு கிடைக்கப் பெறும் மக்களாணைக்கு அமைய அரச சொத்துக்கள் மற்றும் வளங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பில் விசேட ஊடக அறிக்கை வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரசுக்கு சொந்தமான ஒருசில சொத்துக்கள் மற்றும் வியாபாரங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளால் தொழிற்சங்கங்கள்,அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் முரண்பாடற்ற தன்மை நிலவுகிறது. நட்டமடையும் அரச நிறுவனங்களுக்கான செலவுகளை குறைத்துக் கொள்ளதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்ட நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காகவும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.
2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதியாக ஆட்சி செய்த போது எந்த வளங்களையும் நான் தனியார் மயப்படுத்தவில்லை,விற்பனை செய்யவுமில்லை.எனக்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தனியார் மயப்படுத்திய ஸ்ரீ லங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம்,ஸ்ரீ லங்கா ஹொஸ்பிடல் என்பனவற்றை மீண்டும் அரசுமடையாக்கினேன்.இந்த நிறுவனங்கள் இன்றும் இலாபமடைகின்றன.
அரச சொத்துக்கள் மற்றும் வியாபாரம் தொடர்பில் எனது அரசாங்கத்தின் கொள்கை முற்போக்கான நிலையில் காணப்பட்டது.ஏதேனும் அரச நிறுவனம் இலாபமடைந்து மக்களுக்கு சிறந்த சேவை வழங்குமாயின் அவற்றை தனியார் மயப்படுத்த வேண்டிய தேவை கிடையாது.ஒருசில வேளை பொருளாதார மேட்பாட்டுக்காகவும்,குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் அரச நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் ஒருசில உற்பத்திகள் மற்றும் சேவைகளின் விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் மூலோபாய செயற்பாடுகளை முன்னெடுத்தது.மின்சாரத்துறை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
விலைக்கட்டுப்பாட்டினால் அரச நிறுவனங்கள் நட்டமடைந்த போதிலும் எமது பொருளாதார முகாமைத்துவத்தினால் ஒன்பது ஆண்டுகாலமாக பொருளாதாரம் சீராக வளர்ச்சியடைந்தது.அக்காலப்பகுதியில் கடன் செலுத்தவும்,நலன்புரி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.இக்காலப்பகுதியில் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது குறித்து எவரும் பேசவில்லை.
தனியார் மயப்படுத்தல் விடயத்தில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு மாறுப்பட்ட தன்மையில் காணப்படுகிறது.தனியார் மயப்படுத்த கூடிய அனைத்தையும் விற்பனை செய்ய முயற்சிக்கப்படுகிறது.பெரும்பாலான தொழிற்சங்கங்கள் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்து தமது நிலைப்பாட்டை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் இடைக்கால பதவி காலத்தை நிறைவுப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.இவ்வாறான நிலையில் அரச சொத்துக்களை அவசர அவசரமாக விற்பனை செய்தால் நாட்டுக்கு சிறந்த மற்றும் நிலையான பயன் ஏதும் கிடைக்காது.
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளன.இவ்வாறான நிலையில் அரச சொத்துக்களை விற்பதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் தோற்றம் பெற்றுள்ளன.ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் புதிய அரசாங்கம் தோற்றம் பெறும் வரை அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கும்,தனியார் மயப்படுத்தவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள சகல நடவடிக்கைகளையும் முழுமையாக இடைநிறுத்த வேண்டும் என்பது எனது யோசனையாக காணப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் தரப்பு அவர்களுக்கு கிடைக்கப் பெறும் மக்களாணைக்கு அமைய அரச சொத்துக்கள் மற்றும் வளங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM