கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக உரிமைக்கான 50 ஆவது நாள் மாபெரும் போராட்டம் !

12 May, 2024 | 09:45 PM
image

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக சேவைகள் செயற்பாட்டிற்கு எதிரான அடக்கு முறைகளும் அத்து மீறல்களை கண்டித்து பிரதேச செயலகத்தின் முன் இடம்பெற்றுவரும் போராட்டத்தின் 50 நாளை நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை (12) மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம்பெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக உரிமைக்கான போராட்டம்  பிரதேச செயலகத்தின் முன்னால் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் 50 வது நாளாக இடம்பெற்று வருகின்றது

இந்த 50 ஆவது நாளை நோக்கிய போராட்டத்தையிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு போராட்ட இடத்தில் ஆயிரக்கணக்காண பொதுமக்கள் ஒன்று திரண்டு தமிழ் அரசியல் வாதிகளே ஏன் இன்னும் மௌனம், ஒரு அரசியல்வாதியை மகிழ்ச்சிபடுத்துவதற்காக 40 ஆயிரம் பொதுமக்களை துன்புறுத்துவது நியாயமா?, பிரதேச செயலகத்துக்கு மலசல கூடம் கூட திருத்துவதற்கு கூட நிதிவழங்கப்படுவதில்லை, பிரதேச செயலகத்தை உப பிரதேச செயலகமாக மாற்றுவதை உடன் நிறுத்து, அரசியல் வாதிகளின் சூழ்சிகளில் அகப்படவேண்டாம், அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம், எமது வளங்கள் அந்நியர்களால் கபளீரம் செய்யப்பட்டு வருகின்றது, அரச நிதி பங்கீட்டில் புறக்கணிகப்பட்டு வருகின்றோம், எமது பிரதேச செயலகம் எமக்கு வேண்டும் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு கறுப்பு கொடிகள் பொம்மைகள் ஏந்தியவாறு  கோஷங்கள் எழுப்பியவாறு  அங்கிருந்து கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி ஊடாக கல்முனை தரவை ஸ்ரீ சித்தி விநாயகர்  பிள்ளையார்  கோவில் வரை சென்று அங்கிருந்து மீண்டும் கல்முனை நகரை வந்தடைந்து அதனூடாக பிரதேச செயலகத்தை வந்தடைந்து பகல் ஒரு மணிவரை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டபின்னர் ஆர்பாடகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை...

2025-02-19 11:24:04
news-image

சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ”...

2025-02-19 11:14:18
news-image

24 மணித்தியாலங்களும் இயங்கவுள்ள குடிவரவு -...

2025-02-19 11:34:39
news-image

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - சுமந்திரன்...

2025-02-19 11:02:39
news-image

கடலாமையுடன் ஒருவர் கைது!

2025-02-19 11:02:13
news-image

“ஹரக் கட்டா” சி.ஐ.டியிலிருந்து தப்பிச் செல்வதற்கு...

2025-02-19 10:57:54
news-image

புதுக்கடை நீதிமன்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-02-19 11:02:05
news-image

கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற ரயில்...

2025-02-19 10:29:15
news-image

மிதமான நிலையில் காற்றின் தரம் 

2025-02-19 11:07:52
news-image

களுத்துறை கொலைச் சம்பவம் : இருவர்...

2025-02-19 09:51:46
news-image

கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி...

2025-02-19 09:19:14
news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06