தற்போதைய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்த போது நாடு பூராகவும் முறைசாரா முறையில் ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணப்பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள 44,053 வீடுகளை நிர்மாணிப்பதற்கு 15,244.58 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
இந்த ஏற்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் அமைச்சர், இந்த வருடத்திற்குள் அந்த வீடுகளின் நிர்மாணப்பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்த 2015-2019 காலப்பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 07 வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.
இந்த 07 திட்டங்களாக மாதிரி கிராம திட்டம், விசிறி கடன் (உதவி) திட்டம், கிராம சக்தி விசிறி உதவி, விசிறி கடன் திட்டம், விரு சுமித்துறு, சிறுநீரக உதவி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கில் வீடுகளை நிர்மாணித்தல் என்பன அடங்கும்.
இந்த வேலைத்திட்டங்களை செயல்படுத்தும் போது, அன்றைய வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வரம்பிற்கு அப்பால் வீடுகளை நிர்மாணிப்பதற்கு செயற்படுத்தியுள்ளார். தேவையான நிதி இல்லாத காரணத்தினால் இந்த வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஒரு உதா கம்மான திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை பல உதா கம்மானங்களுக்கு பகுதிகளாக ஒதுக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கூறுகிறது. தான் அமைச்சராக இருந்த காலத்தில் பல வீடமைப்புக் கிராமங்களை நிர்மாணித்ததாகக் காட்டும் நோக்கில் அவர் இதனைச் செய்துள்ளதாக அதிகார சபை மேலும் குறிப்பிடுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இந்த வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டாம் என தீர்மானித்ததுடன், அதற்குத் தேவையான ஏற்பாடுகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, மாதிரி கிராம திட்டத்தின் கீழ் 28,537 வீடுகளும், விசிறி கடன் திட்டத்தின் கீழ் 7,063 வீடுகளும், விசிறி கடன் உதவித் திட்டத்தின் கீழ் 1,036 வீடுகளும், கிராம சக்தி திட்டத்தின் கீழ் 1,318 வீடுகளும், விரு சுமித்துறு உதவித் திட்டத்தின் கீழ் 53 வீடுகளும், சிறுநீரக நோயாளிகள் திட்டத்தில் 1,416 வீடுகளும், வெள்ள நிவாரணத் திட்டத்தின் கீழ் 4,630 வீடுகளுமாக மொத்தம் 44,053 வீடுகளின் பணிகள் முடிக்கப்பட உள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM