ராஜபக்ஷர்களுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதா? நாட்டுக்காக கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வதா? ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் - சம்பிக்க

12 May, 2024 | 03:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ராஜபக்ஷர்களுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதா அல்லது நாட்டுக்காக கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும். நாட்டில் மீண்டும் ஒரு அரசியல் நெருக்கடியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோற்றுவிக்கமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மஹரகம பகுதியில் நேற்று சனிக்கிழமை (11) மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடற்ற வகையில் நிறைவடைந்துள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவதற்கு தம்மிடம் வேட்பாளர் இல்லை என்பதையும், அவ்வாறு களமிறக்கினால் படுதோல்வியடைய நேரிடும் என்பதை ராஜபக்ஷர்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் இவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை கோருகிறார்கள்.

பாராளுமன்றத்தின் தற்போதைய பலத்தை கொண்டு பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை அமைக்க ராஜபக்ஷர்கள் முயற்சிக்கிறார்கள். ராஜபக்ஷர்களுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதா அல்லது கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதா என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானிக்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தனது பிரதான இலக்கு என்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார். வெளிநாட்டு அரசமுறை கடன் மறுசீரமைப்பு எதிர்வரும் ஜூலை மாதம் நிறைவு பெறும் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தை கலைத்தால் நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை தோற்றம் பெறும். அது கடன் மறுசீரமைப்புக்கு தாக்கம் செலுத்தும் என்பதை ஜனாதிபதி நன்கறிவார்.

அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்தினால் முரண்பாடான அரசாங்கமே தோற்றம் பெறும். ஜனாதிபதி ஒரு கட்சியையும், அரசாங்கம் பிறிதொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தும்போது அரசியல் நெருக்கடிகள் தோற்றம் பெறும். ஆகவே நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தோற்றம் பெறுவதற்கு ஜனாதிபதி இடமளிக்கமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04
news-image

4 உணவக உரிமையாளர்களுக்கும் எதிராக ரூபா...

2025-03-26 17:35:26
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கோடாவுடன்...

2025-03-26 17:28:12
news-image

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் -...

2025-03-26 17:15:00
news-image

அஸ்வெசும பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதில்...

2025-03-26 17:25:49
news-image

பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார...

2025-03-26 17:06:23
news-image

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக...

2025-03-26 17:07:14