பிக்சல் ப்ளூம், கொழும்பு தாமரை கோபுரத்தில் டிஜிட்டல் கலைப் படைப்புகளின் மூலமான புதிய சகாப்தத்தை அறிவிக்கிறது. இது தெற்காசியாவின் முதல் புத்தம் புதிய, ஊடாடும் டிஜிட்டல் கலை அனுபவத்தை வழங்குகிறது.
இந்த தொலைநோக்கு பார்வையுடைய திட்டமானது தொழில்நுட்பம் மற்றும் ஆக்கப்பூர்வமான படைப்புகளுக்கான தேசத்தின் கலங்கரை விளக்கமாக மாறுவதற்கான கொழும்பு தாமரை கோபுரத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
புத்தம் புதிய ப்ரொஜெக்ஷன் மெப்பிங் தொழில்நுட்பத்தை தடையின்றி ஒருங்கிணைப்பதன் மூலம் பிக்சல் ப்ளூம் பார்வையாளர்களை பெளதீக மற்றும் டிஜிட்டல் உலகங்களுக்கு இடையே உள்ள எல்லைகளை மங்கலாக்கி அனுபவிக்க அழைக்கிறது.
இந்த முயற்சியின் மையப்பகுதியாக, கொழும்பு தாமரை கோபுரம் ஒரு நிறுவலை மட்டும் நடத்தவில்லை பிக்சல் ப்ளூம் இலங்கையில் கலைப்படைப்புகளின் புதுமையின் மையமாக மாறி வருகிறது.
இந்த லட்சியம் மிக்க முயற்சியானது தொழில்நுட்பம் மூலம் கலை வெளிப்பாட்டை மேம்படுத்தும் ஒரு உயரிய படைப்புகளுக்கான நிலப்பரப்பை வளர்ப்பதற்கான கோபுரத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
பிக்சல் ப்ளூம் இலங்கை முழுவதும் புதுமையான கலைப் படைப்புக்களை உருவாக்கவான சூழலை ஊக்குவிக்கும் முயற்சியாகும்.
Bling Productions மற்றும் Eyeonஉடனான கொழும்பு லோட்டஸ் டவரின் கூட்டாண்மை மூலம் ஆக்கப்பூர்வமான அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் டிஜிட்டல் கலை படைப்புகள் மூலம் எதை அடைய முடியும் என்பதற்கான எல்லைகளை மறுவரையறை செய்ய அவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
இந்தக் கூட்டுறவு படைப்பாற்றல் மற்றும் புதுமைகளின் முதன்மையான மையமாக கொழும்பு தாமரை கோபுரத்தின் நிலையை மென்மேலும் வலுப்படுத்தும் எதிர்கால திட்டங்களுக்கும் வழிவகுக்கும்.
ShakyaTM Studio, D4 மற்றும் பல திறமையான இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து இலங்கையில் டிஜிட்டல் கலைப் படைப்புகளின் நிலப்பரப்பை மறுவரையறை செய்து, Pixel Bloom அனுபவத்தை உயிர்ப்பித்துள்ளனர்.
நுட்பமான கைவினைத்திறன் மற்றும் உயர் தொழில்நுட்பங்களின் உபயோகத்தின் மூலம் பிக்சல் ப்ளூம் பார்வையாளர்களை ஒளி மற்றும் ஒலி மூலம் உயிர்ப்பிக்கப்பட்ட ஓர் அற்புதமான பயணத்துக்கு அனைவரையும் வரவேற்கிறது. இங்கு கலை தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைந்து புதிய தலைமுறைக்கான படைப்பாற்றலின் மாற்றும் சக்தியை நிலைநிறுத்துகிறது.
பிக்சல் ப்ளூம் ஏழு வித்தியாசமான அனுபவங்களைக் கொண்ட, மனதை வசீகரிக்கும் உள்நுழையக்கூடியதான டிஜிட்டல் கலை படைப்பொன்றை உங்களுக்கு வழங்குகிறது. ஒவ்வொரு பகுதியும் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. ஒளி, ஒலி மற்றும் வர்ணங்களின் இணைத்தலின் மூலம் உருவாகும் படைப்புகளை ரசிக்க பங்கேற்பாளர்களை அழைக்கிறது.
கொழும்பின் கதை, அதன் அடையாளங்களிலிருந்து பல விதமான ஊடாடும் டிஜிட்டல் மற்றும் உயர்தர கலை நிறுவல்கள் வரை கொழும்பு தாமரை கோபுரத்தின் (Colombo Lotus Tower) கதை, பிக்சல் ப்ளூம் மனித மனதின் படைப்பாற்றல் என வரையறுக்கக்கூடிய வரம்புகளை மீறுகிறது.
பார்வையாளர்கள் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இடங்கள் வழியாக செல்லும்போது, டிஜிட்டல் கலை மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளின் காட்சிப்பொருளை அனுபவிப்பர்.
பிக்சல் ப்ளூமின் நோக்கம், படைப்பாற்றலை ஊக்குவிப்பதாகும். இது பாரம்பரிய எல்லைகளைத் தாண்டி, கலை மற்றும் தொழில்நுட்பத்தின் வரம்பற்ற சாத்தியக்கூறுகளை ஆராய தனிநபர்களுக்கு ஊக்கமளிக்கும் அனுபவத்தை வழங்குகிறது.
பிக்சல் ப்ளூமின் இயக்க மையத்தில் ஓர் இணையற்ற, உணர்வுபூர்வமான பயணத்தை வழங்குவதற்காக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட ஓர் அதிநவீன தொழில்நுட்ப உள்கட்டமைப்பு உள்ளது. EPSON லேசர் ப்ரொஜெக்டர்களால் இயக்கப்படும் இந்த நிறுவல் அதிநவீன மீடியா சர்வர்கள் (media servers) மற்றும் ஃபைபர் டேட்டா (fiber data) தொழில்நுட்பத்துடன் தடையற்ற தரவு பரிமாற்றம் மற்றும் அதி தெளிவான காட்சிகளை உறுதி செய்கிறது.
ஊடாடும் அனுபவங்களைச் செயல்படுத்தும் மோஷன் சென்சார்கள் (motion sensors) கொண்ட இந்த நிறுவலின் ஒவ்வொரு பகுதியும் தானியங்கக்கூடிய திறனுடன் நாள் முழுவதும் தடையின்றி செயல்படும் திறனும் கொண்டவாறு வடிவமைக்கப்பட்டு, Colombo Lotus Towerஇன் பார்வையாளர்களின் எதிர்காலத்தை போன்றதோர் அனுபவத்தில் மூழ்கடிக்கிறது.
மேலும், பிக்சல் ப்ளூமுக்காக தனிப்பயனாக்கப்பட்ட EX1 தன்னியக்க செயற்பாட்டுடனான ஓர் அதிநவீன கட்டுப்பாட்டு மையம் தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்கிறது.
Artnet தொழில்நுட்பம் சிக்கலான பிக்சல் விளக்குகளை கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் DMX சிக்னல் அனைத்து ஒளிர்வு தொடர்பான அம்சங்களையும் நிர்வகித்து இந்த நிறுவலின் ஒவ்வோர் உறுப்புக்கும் துல்லியமான கணினிமயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டை வழங்குகிறது.
உள்ளூர் மற்றும் சர்வதேச தொழில்நுட்ப வடிவமைப்பாளர்கள், 3D கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்கள், பொறியியலாளர்கள், டெவலப்பர்கள், ஆடியோ வல்லுநர்கள், ஒளி வடிவமைப்பாளர்கள் மற்றும் பலர் உட்பட பலதரப்பட்ட ஆக்கபூர்வமான சிந்தனையாளர்களை Pixel Bloom ஒருங்கிணைக்கிறது.
கருத்துருவாக்கம் முதல் செயல்படுத்துதல் வரை பிக்சல் ப்ளூமினை உயிர்ப்பிக்க இக்குழு தடையின்றி ஒத்துழைக்கிறது. தொழில்நுட்ப வடிவமைப்பாளர்கள் இந்த அனுபவங்களை உருவாக்க தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்களை பயன்படுத்தும். அதே நேரத்தில் இசைக்கலைஞர்கள் ஒட்டுமொத்த சூழலையும் உணர்வுகளையும் மேம்படுத்தும் வசீகரிக்கும் ஒலிக்காட்சிகளை உருவாக்குகின்றனர்.
கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை இந்த நிறுவலின் ஒவ்வோர் அம்சத்திலும் புகுத்துகிறார்கள். ஒவ்வொன்றிலும் கலைநயம் எதிரொலிப்பதை உறுதி செய்கிறது. ஒன்றாக, இந்த பல்துறை குழுவானது இலங்கையில் டிஜிட்டல் கலை வெளியில் ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்க சக்திக்கு Pixel Bloom ஒரு சான்றாக இருப்பதை உறுதி செய்கிறது.
பிக்சல் ப்ளூம், டிஜிட்டல் கலையின் வரம்பையும் தாக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை அறிவை மையமாக கொண்டிருக்கும் கல்வியால் இயங்கும் எதிர்காலத்தைத் தழுவுகிறது. இது STEAM கல்வியை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை & கணிதம் படைப்பாற்றல் மற்றும் புதுமைக்கான ஊக்கிகளாகத் முன்னேற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒத்துழைப்பு மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளலை ஊக்குவிப்பதன் மூலம் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக செயல்பட, டிஜிட்டல் கலைத்திறனின் எல்லைகளைத் தள்ளவும், புதிய சாத்தியங்களைத் தழுவவும் தனிநபர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
பிக்சல் ப்ளூம் பல உள்ளூர் மற்றும் சர்வதேச ஆக்கப்பூர்வ சிந்தனையாளர்களை எதிர்காலத்தில் திட்டத்தில் ஒத்துழைத்து டிஜிட்டல் கலை நிறுவலில் அவ்வப்போது புதிய அனுபவங்களை வழங்குவதோடு பார்வையாளர்களுக்கு அவர்களின் அடுத்த வருகையின்போது புதிய அனுபவத்தையும் வழங்கும்.
பிக்சல் ப்ளூமின் மாயத்தை நேரில் அனுபவித்து, உங்கள் உணர்வுகளை உயர்த்தி, உங்கள் கற்பனையைத் தூண்டும் பயணத்தைத் தொடங்குங்கள்.
மிக அழகான இயற்கைக்காட்சிகள், ஊடாடும் நிறுவல்கள் மற்றும் வசீகரிக்கும் கதைகள் ஆகியவற்றை அனுபவிப்பதில் எங்களுடன் இணையுங்கள். பிக்சல் ப்ளூம் மூலம் எதிர்காலத்தில் அடியெடுத்து வைக்கவும், இந்த உன்னதமான அனுபவத்தினை ரசிக்க உங்கள் புலன்கள் உங்களை வழிநடத்தட்டும். பிக்சல் ப்ளூம் டிஜிட்டல் கலையின் அதிசயத்தைப் பார்க்க, உணர, உங்களை அழைக்கிறது.
இது தொடர்பில் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க (ஓய்வு பெற்ற) கூறுகையில், “நாங்கள் கொழும்பு தாமரை கோபுரத்தில் பிக்சல் ப்ளூம் டிஜிட்டல் கலை அருங்காட்சியகத்தை திறந்துவைப்பதுடன், அனைத்து இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் அனுபவித்து மகிழக்கூடிய புத்தம்புதிய டிஜிட்டல் கலையின் படைப்புகளை உருவாக்கும் முன்னோடியாக ஆவதை கொண்டாடுகிறோம்..." என்றார்.
வர்த்தக அபிவிருத்தி முகாமையாளர் Bimsara Rozairo கூறுகையில், "வளர்ந்துவரும் டிஜிட்டல் சகாப்தத்தில் நாம் முன்னேறி வரும் நிலையில், தெற்காசியாவில் முதன்முறையாக புத்தம்புதிய மற்றும் ஊடாடும் டிஜிட்டல் கலை படைப்புகளை கண்டுகளிக்கக்கூடிய தொழில்நுட்பத்தை நாங்கள் வழங்குவதன் மூலம் கொழும்பு தாமரை கோபுரம் தொழில்நுட்பத்தின் முன்னோடியாக இருப்பதை உறுதி செய்கின்றோம்." என்றார்.
பிளிங் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் மார்லன் ஜேசுதாசன் தெரிவிக்கையில், "இது கொழும்பு தாமரை கோபுரத்தில் உயிர்ப்பிக்கப்பட்ட மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டம் ஒன்றாகும்." என்று கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM