கொழும்பு லீடர்ஷிப் அகாடமி வங்கித் துறையில்,பாராட்டத்தக்க தலைமைத்துவம், அர்ப்பணிப்பு போன்ற விழுமியங்களில் சிறந்து விளங்கும் நிபுணர்களை அங்கீகரிப்பதற்கான ஒரு மன்றமாகும்.
இந்த மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த முகாமையாளர் விருதுகள் பான் ஏசியா வங்கிக்கு வழங்கப்பட்டமை வங்கியின் சிறந்த கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஈடு இணையற்ற சேவையை வழங்குவதற்குமான வங்கியின் உத்வேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த மதிப்பிற்குரிய பாராட்டைப் பெற்றவர்களில் புத்திக பெரேரா, உதவி பொது முகாமையாளர் - வைப்புத் திரட்டல் மற்றும் தனியார் வங்கி யோஹான் ஏபெல், தலைமை மேலாளர் - பாங்கஸ்யூரன்ஸ் மற்றும் வீட்டுவசதி; பியல் அத்தநாயக்க, முகாமையாளர் – கண்டி கிளை; சஞ்சீவனி செனவிரத்ன, முகாமையாளர் - நாவல கிளை; ஜெரோம் சொலமன்ஸ், முகாமையாளர் தலவத்துகொட கிளை -; சமத் அதுகோரள, சிரேஷ்ட முகாமையாளர் - திறைசேரி மத்திய அலுவலகம்; ஹிரான் பெரேரா, முகாமையாளர் - பிலியந்தலை கிளை; மற்றும் தினேஷ் ஜயசிங்க, பொறுப்பு அதிகாரி - கடன் நிர்வாக பிரிவு ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் விதிவிலக்கான தலைமைத்துவம், புதுமை மற்றும் அவரவர் பாத்திரங்களில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர், இவர்களின் பங்களிப்பு பான் ஏசியா வங்கியை தொடர்ச்சியான வெற்றி மற்றும் வளர்ச்சியை நோக்கிச் செலுத்தும் உந்துசக்தியாக விளங்குகின்றது.
பான் ஏசியா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி நளீன் எதிரிசிங்க இந்த மகத்தான வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில் "கொழும்பு லீடர்ஷிப் அகாடமி 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த முகாமையாளர் விருதுகளை எமது தலைசிறந்த முகாமையாளர்களுக்கு வழங்கியுள்ளது என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களின் செயல்திறன், புத்தாக்கம் மற்றும் சிறந்த சேவைகள் ஆகியவை எங்கள் அன்பான வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வங்கிச் சேவைகளைக் கொண்டுவரும் பான் ஏசியா வங்கியின் நோக்கத்தின் தொடர்ச்சியான சான்றாகும்." என தெரிவித்தார்.
சிறந்த முகாமையாளர் விருதுகள் 2023 பான் ஏசியா வங்கியின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கும், வங்கித் துறையில் சிறப்பான சாதனைகளைப் பாராட்டுவதற்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்குமான சான்றாகும்.
இந்த ஒப்புதலானது, நிதித்துறையில் முன்னணியில் இருக்கும் பான் ஏசியா வங்கியின் நிலைப்பாட்டை மென்மேலும் வலுப்படுத்த உதவுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM