எம்மில் பல இளம்பெண்களுக்கு திடிரென்று அடிவயிற்றில் வலி ஏற்படும். அத்துடன் தாங்கமுடியாத இடுப்பு வலியும், மாதவிடாயின் போது அதிகளவிலான இரத்தப்போக்கும் இருக்கும். இவர்கள் பயந்து சிகிச்சைக்காக மருத்துவர்களை நாடுவர். மருத்துவர்கள் இவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்குவர்.
இது போன்ற அடிவயிற்று வலி, அதிக இரத்த போக்கு, இடுப்பு வலி இவற்றுடன் மலச்சிக்கல், சிறுநீர் கழித்த பின்னரும் சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கர்ப்பபையில் நார்த்திசுக்கட்டி இருக்கிறதா? என்பது குறித்து பரிசோதிக்க வேண்டும். இத்தகைய பாதிப்பிற்கு உள்ளானவர்களில் ஒரு சிலருக்கு கர்ப்பப்பையில் இரத்த கசிவு கூட ஏற்படக்கூடும்.
இந்நிலையில் பெண்களுக்கு கர்ப்பப்பையில் நார்த்திசுக் கட்டி என்பது இன்ட்ராமியூரல் பைப்ராய்ட், சப்சிரோசில் பைப்ராய்ட், சப்மியூகோசல் பைப்ராய்ட் என மூன்று வகையான கட்டிகள் இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
இவ்வகையான தசைக்கட்டிகள், கர்ப்பப்பையில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இதற்கான மருத்துவ காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதில்,சப்சிரோசல் பைப்ராய்ட் கர்ப்பப்பையின் வெளிப்புறத்தில் வரக் கூடியது. இன்ட்ராமியூரல் பைப்ராய்ட் கர்ப்பப்பையின் வெளிப்புறம் மற்றும் உட்சுவர்களில் வரக் கூடியது.சப்மியூகோசல் பைப்ராய்ட் கர்ப்பப்பையின் உட்சுவர் பகுதியில் வருவது. இதனை குணப்படுத்த அப்டாமினல் மயோமெக்டமி, ஹிஸ்ட்ரெக்டமி என பல சத்திர சிகிச்சை முறைகள் உள்ளன. கட்டியின் பாதிப்பு மற்றும் தன்மையை பொறுத்து இத்தகைய சத்திர சிகிச்சை செய்து கட்டிகளை அகற்றலாம்.
தற்போது, மருத்துவ முன்னேற்றம் காரணமாக, இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி என்ற சிகிச்சை முறையிலும் இதனை குணப்படுத்தலாம். டேகேர் ட்ரீட்மெண்ட் போல் காலையில் மருத்துவமனைக்கு வந்து, அன்றே சிகிச்சை முடிந்து திரும்பி விடலாம். அத்துடன் இத்தகைய சத்திர சிகிச்சையின் போது தழும்புகள் கூட ஏற்படாது.
இருப்பினும் இன்றைய இளம் பெண்கள் கர்ப்பப்பையில் பைப்ராய்ட் கட்டிகளை வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அத்துடன் தங்களின் வாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக் கொண்டு, உணவு வகைகளையும் மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும்.
Dr. தீபா
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM