(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்தின் நிதி குழுவுக்கும் கோப் குழுவுக்கும் அந்த அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை நடத்த முடியும் என சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) அது தொடர்பில் எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) பேராசிரியர் சரித்த ஹேரத் எம்பி கூட்டொன்றை முன்வைத்து குறிப்பிடுகையில், மத்திய வங்கிக்கும் அரசாங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்ற நிலைப்பாட்டில் அந்த வங்கி செயற்படுகிறது அந்த செயற்பாடுகள் பாரதூரமானவை. அந்த அதிகாரிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அந்த விடயம் தொடர்பில் சபையில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்பி குறிப்பிடுகையல், புதிய அறிக்கையின் படி மத்திய வங்கி கடந்த வருடத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா நட்டம் மீட்டியுள்ளது. எனினும் அவர்களின் செயற்பாடுகள் மூலம் 70 வீத சம்பள அதிகரிப்பை மத்திய வங்கி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இது எந்த வகையில் நியாயமாகும்? என்றார்.
இந்த விடயம் தொடர்பில் விமல் வீரவன்ச எம் பி சபையில் தெரிவிக்கையில், சம்பள அதிகரிப்பு ஒரு புறம் இருக்க மத்திய வங்கி தான் ஒரு அரசாங்க நிறுவனமல்ல, அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டியதில்லை என்ற சிந்தனையுடன் செயற்படுவது பாரதூரமான விடயமாகும். அது தொடர்பில் முதலில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அந்த சிந்தனையிலிருந்து மத்திய வங்கியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என்றார்.
மேற்படி மூவரின் கேள்விகளுக்கு பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிடுகையில், மூன்று எம்பிக்களும் சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த முடியும் அத்துடன் மத்திய வங்கியினால் நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ள அறிக்கையை கோப் குழுவுக்கு கொண்டு வரவும் முடியும். ஏனெனில் மத்திய வங்கி கோப் குழுவுக்கு கட்டுப்பட்ட நிறுவனமாகும். மறுபுறம் அதனை நிதி குழுவுக்கு அழைக்கவும் முடியும். சபாநாயகர் உரிய பணிப்புரை விடுத்தால் அதனை மேற்கொள்ள முடியும் என்றும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM