கொழும்பிலிருந்து மாத்தளை நோக்கிப் பயணித்த பஸ்ஸில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தம்புள்ளை டிப்போவிற்கு சொந்தமான இந்த பஸ் இன்று செவ்வாய்க்கிழமை (07) நிட்டம்புவ பிரதேசத்தை அண்மித்துள்ளது.
இதன் போது , பின் இருக்கையில் அமர்ந்திருந்த முதியவர் சுகயீனமுற்றிருப்பதை அறிந்து பஸ் நிறுத்தப்பட்டுள்ளது .
பின்னர் , கயீனமுற்ற நபரை நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்திய அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்ட முதியவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து , பொலிஸார் முதியவரின் சடலத்தை வட்டுப்பிட்டியால ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர் .
உயிரிழந்த முதியவரின் விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை என்பதால் சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM