மட்டக்களப்பு - காத்தான்குடி- 01, பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல அரிசி ஆலையில் பாரிய சத்தத்துடன் ஆலையின் எரிவாயு வெடித்ததில் பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் உயிரிழப்போ, காயங்களோ எவருக்கும் ஏற்படவில்லை. குறித்த வெடிப்புச் சம்பவத்தில் அரிசி ஆலை மற்றும் கடை ஒன்றின் களஞ்சியசாலை போன்றவற்றுக்கு பொருளாதார சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அருகிலுள்ள சில வீடுகளுக்கும் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
அரிசி ஆலைக்கு சுமார் 5 இலட்சம் ரூபாவும், கடை களஞ்சியசாலைக்கு ஐந்து இலட்சம் ரூபாவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர;கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM