எம்முடைய இல்லங்களில் வசிக்கும் உறுப்பினர்கள் முதுமையடைந்து மரணத்தை சந்தித்திருப்பார்கள். இவர்கள் மரணத்திற்கு பின் மோட்சத்தை அடைந்திருப்பார்கள் அல்லது மறுபிறவியை எடுத்திருப்பார்கள்.
ஆனால் இவர்களில் சிலர் மோட்சத்தையும் அடையாமல் மறுபிறவியையும் எடுக்காமல் அந்தரத்தில் இருப்பர். ஏனெனில் இவர்களுடைய கர்ம பலன்களில் குறைபாடு இருப்பதால் இவர்களால் பிரபஞ்சத்துடன் ஐக்கியமாக முடியாது.
மறுபிறவியையும் எடுக்க இயலாது. இதுபோல் திரிசங்கு நிலையில் இருப்பவர்களை பூமியில் இருக்கும் நாம் ஆண்டுதோறும் வழிபாடு செய்து வணங்கிட வேண்டும் என எம்முடைய முன்னோர்கள் தெரிவிக்கிறார்கள்.
உடனே எம்மில் சிலர் எங்களுடைய பரம்பரையில் இது போல் திரிசங்கு நிலையில் உள்ள ஆத்மாவை எப்படி உணர்ந்து கொள்வது? என வினா எழுப்புவர்.
இதற்கும் மரபணு ஜோதிடர்கள் தெளிவாக விளக்கம் அளிக்கிறார்கள். உங்களது வீட்டில் அல்லது யாருடைய வீட்டில் பூச நட்சத்திரம்... விசாக நட்சத்திரம்... சதய நட்சத்திரம்..
ஆகிய மூன்று நட்சத்திரங்களிலும், தனுசு லக்னத்திலும் பிறக்கிறார்களோ...! அவர்களுடைய பரம்பரையில் உள்ளவர்களில் சிலர் மறுபிறவியையும் எடுக்காமல், மோட்சத்தையும் அடைய வழி தெரியாமல், திரிசங்கு நிலையில் உள்ளனர் என்பதனை சூட்சமமாக அறியலாம்.
உங்களது குடும்பத்திலோ அல்லது உங்களுக்கு அறிமுகமான நபர்களின் குடும்பத்திலோ யாரேனும் இந்த நட்சத்திரத்திலும், இந்த லக்னத்திலும் பிறந்திருந்தால்... அவர்களுக்கு கர்ம வினைகள் மீதம் இருக்கிறது என பொருள். இதனை அனுபவம் வாய்ந்த மரபணு ஜோதிடர் மூலம் தெரிந்து கொண்டு அல்லது உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களுக்குரிய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
இதனை செய்ய தவறும் போது உங்களுக்கான சுப பலன்கள் கிரக வலிமை இருந்தும் முழுமையாக கிடைக்காது. பரிகாரங்களை செய்தாலும் சுப பலன்கள் குறைவாகத்தான் கிடைக்கும். நீங்கள் இந்த கர்ம வினைகள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு அதற்குரிய வழிபாட்டை பரிகாரமாக மேற்கொண்டால்தான் உங்களுக்கான ..இந்த பிறவியில் நீங்கள் அனுபவிக்க வேண்டிய சுப பலன்கள் கிடைக்கும் என்பது உறுதி.
இதுபோன்ற திரிசங்கு நிலையில் உள்ள ஆத்மாக்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை அவர்களை பிரீத்தி செய்வதற்கான வழிபாட்டை உறுதியாக மேற்கொள்ள வேண்டும். இது நம்மை விட்டு நீங்கிய நம் முன்னோர்களை வழிபடும் ஒரு வழிபாட்டு முறை.
இதனையும் குலதெய்வ வழிபாட்டையும், அமாவாசை தோறும் வழங்கும் திதி பரிகாரத்தையும்... ஒன்றிணைத்து குழப்பிக் கொள்ளக் கூடாது. இவை அனைத்தும் தனித்துவமானவை என்பதில் தெளிவு வேண்டும்.
எனவே கர்ம வினைகளை குறைக்க எம்முடைய முன்னோர்களை வழிபடும் வழிபாட்டை கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மோட்சத்தை அடைவார்கள் அல்லது மறுபிறவி எடுப்பார்கள்.
தகவல் : விஷால் - தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM