(நா.தனுஜா)
இந்தியாவில் நடைப்பெற்று வரும் மக்களவைத் தேர்தலை (பொதுத்தேர்தல்) பார்வையிடுவதற்கான' சர்வதேச தேர்தல் பார்வையாளர் திட்டம்' இந்திய தேர்தல் ஆணையகத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (04) ஆரம்பமானது.
எதிர்வரும் 9 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தில் இலங்கை சார்பில் 10 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
இவர்களில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் இருவரும், தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் எண்மரும் உள்ளடங்குகின்றனர்.
சர்வதேச தேர்தல் பார்வையாளர் திட்டமானது சர்வதேச தேர்தல் முகாமை கட்டமைப்புக்களும்,தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய அமைப்புக்களும் உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பின்பற்றப்படும் தேர்தல் முறைமை பற்றி அறிந்துக் கொள்வதற்கும் தேர்தல் கட்டமைப்பு குறித்து கற்றறிவதற்கும் வாய்ப்பளிக்கிறது.இதேபோன்ற திட்டம் இந்திய தேர்தல்கள் ஆணையகத்தினால் கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற மக்களவைத் தேர்தலின் போதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இத்திட்டானது இந்திய தேர்தல்கள் தொடர்பான அறிமுகம் , இலத்திரனியல் வாக்குப்பதிவு,தகவல் தொழில்நுட்ப செயற்திட்டங்கள்,ஊடக மற்றும் சமூக வலைத்தளச் செயற்பாடுகள் உள்ளிட்ட பரந்துப்பட்ட விடயப்பரப்புக்களை உள்ளடக்கியுள்ளது. அதுமாத்திரமன்றி இத்திட்டத்தின் பங்கேற்பாளர்கள் குழுவாக இணைந்து வெவ்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்வதற்கும் அங்கு தேர்தல் செயன்முறையை பார்வையிடுவதற்குமான வாய்ப்பையும் இத்திட்டம் வழங்குகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM