சட்டவிரோதமான முறையில் 5 மாடுகளை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் மற்றும் 20 ஆடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் ககப்பற்றப்பட்டதாகவும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாவும் அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (3) அதிகாலை மிஹிந்தலை நகரத்தில் செட்டிக்குளத்திலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த லொறியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சட்டவிரோதமான முறையில் 20 ஆடுகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட எலகமுவ பகுதியில் தெமட்டெவயிலிருந்து பும்போகம நோக்கிப் பயணித்த கெப் வாகனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சட்டவிரோதமான முறையில் 5 மாடுகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெக்கிராவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM