ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணம் மோசடி செய்த நபர் கைது

03 May, 2024 | 07:25 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளினால் இன்று வெள்ளிக்கிழமை (3) கைது செய்யப்பட்டுள்ளார்.

ருமேனியாவில் தொழில் பெற்றுக் கொள்வதற்காக குறித்த சந்தேக நபருக்கு பணம் வழங்கி, வாக்குறுதி அளிக்கப்பட்ட பிரகாரம் தொழில் பெற்றுத் தரவில்லை என இளைஞர்கள் இருவர் பணியகத்துக்கு முறைப்பாடு செய்துள்ளதுடன் மேலும் சில நபர்களிடம் பணம் பெற்றுக் கொள்வதற்காக சந்தேக நபர் பத்தரமுல்லை தியத்த உயன பகுதிக்கு வர இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய உடனடியாக செயற்பட்ட விசாரணை அதிகாரிகளால் பத்தரமுல்லை தியத்த உயன அருகாமையில் இருந்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ருமேனியால் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து நாட்டில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களிடமிருந்து குறித்த சந்தேக நபர் 3 இலட்சம் முதல் 7 இலட்சம் ரூபா வரை பெற்றுள்ளார். அதன் பிரகாரம் சந்தேக நபர் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணம் மோசடி செய்துள்ளமை வெளிப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் கொழும்பில் தங்கி இருந்து இந்த மோசடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 

இதற்கு முன்னர் குறித்த சந்தேக நபர் ருமேனியாவில் சேவை செய்த நபர் என மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த மோசடி வியாபாரத்துக்கு சந்தேக நபருக்கு உதவியாக இருந்த மேலுமொரு நபர் இனம் காணப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் தினங்களில் அவரும் கைதுசெய்யட இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை சனிக்கிழமை (4) மாளிகாவத்தை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சகல தொகுதிகளிலும் யானை சின்னத்தில்...

2025-03-17 18:24:37
news-image

சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்...

2025-03-17 17:40:31
news-image

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப கொலைகள்...

2025-03-17 17:33:53
news-image

யாழ். அம்பன் பகுதியில் மதுபோதையில் அயல்...

2025-03-17 17:32:00
news-image

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின்...

2025-03-17 17:26:01
news-image

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

2025-03-17 17:25:29
news-image

தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சியில் வேட்புமனுத்...

2025-03-17 17:40:52
news-image

யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை...

2025-03-17 17:24:09
news-image

யாழில் மே மாதம் கனேடிய கல்வி...

2025-03-17 17:23:19
news-image

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல...

2025-03-17 17:15:43
news-image

பொகவந்தலாவ பகுதியில் வாள்வெட்டு ; விசாரணைகள்...

2025-03-17 17:12:17
news-image

ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள்...

2025-03-17 16:50:49