தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பிரகடனப்படுத்தப்பட்ட மே தினம் இன்று அரசியல் கட்சிகளின் பலத்தை காட்டும் தினமாக மாறியுள்ளது. எதிர்வரும் காலங்களில் இநத நிலைமையை மாற்றியமைக்க தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் எம். ஆர். எம். பைசால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மே முதலாம் திகதி தொழிலாளர்களின் தினமாக காணப்படுகின்றபோதும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை தொழிலாளர்களின் தேவைகளை கண்டறியாமல் அவர்களின் தேவைகளையும் உரிமைகளையும் வென்றெடுக்க முடியாத நிலைமையில் இன்று மே தினம் அமைந்திருக்கிறது. சர்வதேச தொழிலாளர் தினம் என மே முதலாம் திகதியை பிரகடனப்படுத்தியதன் நோக்கம் இன்று மறக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலாக அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் கட்சிகளை பலப்படுத்துவதற்காக மக்களை ஒன்றிணைத்து தங்களின் பலத்தை காட்டுவதற்காக மே தினத்தை மாற்றிக்கொண்டுள்ளன. இன்று அரசியல் கட்சிகளின் தொழிற் சங்கங்களிலும் தொழிலாளர்களின் கோரிக்கைகள்,குரல்கள் நசுக்கப்பட்டு வருகின்றன.
இம்முறையும் மே தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன,தேசிய மக்கள் சக்தி தலைநகரில் தங்களின் மேதின கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கம்பஹாவில் மேதின கூட்டத்தை நடத்தி இருந்தது. ஆனால் இந்த கட்சிகளில் யாரும் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பில் குரல் கொடுக்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM