சுமாரான மொத்த எண்ணிக்கைகளைக் கொண்ட போட்டியில்; சென்னையை 7 விக்கெட்களால் வெற்றிகொண்டது பஞ்சாப்

Published By: Vishnu

02 May, 2024 | 02:54 AM
image

(நெவில் அன்தனி)

சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் புதன்கிழமை (01) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 49ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை எதிர்த்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.

இப் போட்டி முடிவை அடுத்து அணிகள் நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் தொடர்ந்தும் 4ஆம் இடத்தில் இருக்கிறது. 8ஆவது இடத்திலிருந்த பஞ்சாப் கிங்ஸ் ஒரு இடம் முன்னேறி 7ஆம் இடத்தை அடைந்துள்ளது.

இப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸின் ஆற்றல்கள் எதிர்பார்த்ததைவிட குறைந்த மட்டத்தில் இருந்தது.

163 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 17.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்று மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

மொத்த எண்ணிக்கை 19 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் ப்ரப்சிம்ரன் சிங் 13 ஒடட்ங்களுடன் வெளியேறினார்.

எனினும், ஜொனி பெயாஸ்டோவ், ரைலி ரூசோவ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஜொனி பெயாஸ்டோவ் 30 பந்துகளில் 46 ஓட்டங்களையும்  ரைலி ரூசோவ் 23 பந்துகளில் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன் பின்னர் ஷஷாங்க் சிங், அணித் தலைவர் சாம் கரன் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வெற்றி அடையச் செய்தனர்.

சாம் கரன் 26 ஓட்டங்களுடனும் ஷஷாங் சிங் 25 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பெரும் சிரமத்திற்கு மத்தியில் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

அஜின்கியா ரஹானேயும் அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாடும் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தபோதிலும் அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்ததால் சென்னை சுப்பர் கிங்ஸினால் பலமான நிலையை அடைய முடியாமல் போனது.

முதலில் ஆட்டம் இழந்த அஜின்கியா ரஹானே 29 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய உலகக் கிண்ண அணியில் முதல் தடவையாக இடம்பிடித்த ஷிவம் டுபே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

மத்திய வரிசையில் சமிர் ரிஸ்வி 21 ஓட்டங்களையும் மொயின் அலி 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

எம்.எஸ். தோனி எதிர்கொண்ட 11 பந்துகளில் 5 பந்துகளை வீணடித்து ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ராகுல் சஹார் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹாப்ரீத் ப்ரார் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஹாப்ரீத் ப்ரார் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11