லுணுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்கு உபட்ட பகுதியில் 12 இலட்சம் ரூபா பெறுமதியான 7 மாடுகளைத் திருடியதாகக் கூறப்படும் நால்வர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் லுணுகம்வெஹெர , உடவலவ மற்றும் பல்லேபெத்த ஆகிய பிரதேசங்களில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் லுணுகம்வெஹெர , உடவலவ மற்றும் பல்லேபெத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 29, 30, 41 மற்றும் 53 வயதுடையவர்களாவர்.
விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாடுகளை திருடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வேனொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு லுணுகம்வெஹெர பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM