ஜனாதிபதியை கடந்த 2006 ஆம் ஆண்டு கொலை செய்ய முயற்சித்து சிறைவாசம் அனுபவித்துவரும் விடுதலைப்புலி உறுப்பினரான சிவராஜா திலீபனுக்கு ஜனாதிபதி நேற்று தனது ஒருவருட பூர்த்தி விழாவின்போது பொதுமன்னிப்பு வழங்கினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2006 ஆம் ஆண்டில் அமைச்சராக பதவிவகித்தபோது ஏப்ரல் 23 ஆம் திகதி ஜனாதிபதியை கொலை செய்வதற்கு தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவத்தின் சூத்திரதாரியான சிவராஜா தீலிப்பன் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்துள்ளார்.
அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒருவருட பூர்த்தி நிகழ்வு "நல்லாட்சியும் ஸ்திரமான நாடும்" என்ற தொனிப்பொருளிலான விழா கொழும்பு பண்டாரநாக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது சிவராஜா திலீபன் மேடைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது ஜனாதிபதி சிவராஜாவுக்கு கைகொடுத்து அவரது தலையை தடவி தனது மன்னிப்பை வழங்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM