வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது (படங்கள்)

Published By: Ponmalar

24 Mar, 2017 | 01:29 PM
image

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (24) காலை 6.05 மணியளவில் 19 கிலோ 762 கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா மதுவரி அத்தியட்சகர் எஸ். செந்தூர் செல்வன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

இன்று காலை தமது திணைக்களத்திற்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட  சோதனையின் போதே குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கடத்திவரப்பட்ட குறித்த கேரள கஞ்சா புளியங்குளம் - நெடுங்கெணி பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த நபரொருவரின் பயணப்பொதியிலிருந்து மீட்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர் வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபரை விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக  மதுவரி அத்தியட்சகர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43